ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய அளவிலான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதற்றம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைகளையும் உயர்த்தி இருக்கிறது.
ஈரானின் குறிப்பிட்ட சில பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய அளவிலான பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவல் வெளியானதை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயரத் தொடங்கி இருக்கின்றன.

ஈரானின் அணுசக்தி திட்டம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரிய அளவிலான கவலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஈரான் பயங்கரமான அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் அது இந்த உலகிற்கே பெரிய ஆபத்து என்றும் அமெரிக்கா கூறி வருகிறது. இந்த நிலையில் ஈரானின் அணுசக்தியை திட்டங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டு வந்தது.
ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் இதுவரை எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க அரசு இதுவரை ஐந்து கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தி முடித்து இருக்கிறது .ஆனால் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் இந்த பேச்சுவார்த்தையை தடுத்து நிறுத்தி இருக்கிறது.
சில தினங்களுக்கு முன்னர் ஈரானின் அணு ஆயுத கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க உளவுத்துறை சந்தேகம் தெரிவித்தது. இதனை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்பும் படி அமெரிக்கா அரசு அறிவித்தது. இந்த சூழலில் ஈரானின் ராணுவ தளங்கள் மற்றும் அணு ஆயுத பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துதியது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த தகவல் வெளியானதை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் முக்கிய சந்தையான West Texas Intermediateஇல் ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 12.6 சதவீதம் உயர்ந்து 76.61 டாலர்களாகவும் Brent North Sea கச்சா எண்ணெய் 12 சதவீதம் விலை உயர்ந்து 77.77 டாலர்களாகவும் விற்பனையாகின்றன.
இந்த போர் பதற்றம் தொடர்ந்தால் அடுத்தடுத்த நாட்களில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும். அவ்வாறு விலை உயரும் போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும். இது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரும்.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

ரிலையன்ஸ் முதல் ஜேகே டயர்ஸ் வரை..அடி வாங்கும் முக்கிய பங்குகள்! உங்க லிஸ்டில் ஏதும் இருக்கா?

SBI முதல் BoB வரை..பொதுத்துறை வங்கி பங்குகளில் ஏன் ரத்த ஆறு? முக்கிய காரணங்கள்இதோ?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

கத்தார் வாழ் இந்தியர்களே கவனம்!! வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!! #Iranwar

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

ஈரான் போர்: வான்வெளியில் மட்டுமல்ல நீருக்கடியிலும் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா!!



Click it and Unblock the Notifications