பெய்ஜிங்: உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் இருக்கிறதோ இல்லையோ அதன் பயம் எல்லாரையும் தொற்றிக் கொண்டுள்ளது.
சுமார் இதுவரை 7.174 பேரினை பலி கொண்டுள்ள இந்த வைரஸினால், 1,82,742 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே இந்தியாவினை பொறுத்த வரையில் மூன்று பேர் கொரோனா வைரஸினால் பலியாகியுள்ளனர். கிட்டதட்ட 130-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸினால் தாக்கம் அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் இப்படி ஒரு புறம் இப்படி சென்று கொண்டிருக்கிறது எனில், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சீனா தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா, ஜியோமி, ஒப்போ உள்ளிட்ட நிறுவனங்கள் பேஸ் மாஸ்க் உள்ளிட்ட பல மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வாரி வழங்கியுள்ளனராம்.
ஒப்போவின் அதிரடி நடவடிக்கை
சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஒப்போ நிறுவனம் சீனாவினை தவிர மற்ற ஐந்து நாடுகளுக்கு இதுவரை 3,00,000 பேஸ் மாஸ்குகளை நன்கொடையாக வாரி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இது FFP3 மற்றும் N95 முகமூடிகளை நன்கொடையாக அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜியோமி நன்கொடை
இந்த மாதத் தொடக்கத்தில் ஜியோமி ஸ்மார்ட்போன் நிறுவனம், இத்தாலியின் சிவில் பாதுகாப்புக்கு FFP3 சர்ஜிகல் மாஸ்கினை அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளது. சீனாவுக்கு வெளியே பாதிக்கப்பட்ட நாடுகளில் தற்போது இத்தாலி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜாக்மா அறிவித்த ஜாக்பாட்
இதே அலிபாபா நிறுவனர் ஜாக்மா தனது ட்விட்டர் பக்கத்தில் 1 மில்லியன் பேஸ்புக் முகமூடிகள் மற்றும் 5,00,000 கொரோனா வைரஸ் குறித்த மருத்துவ கருவிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பூசியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உதவுவதற்காக 100 மில்லியன் யுவானினை நன்கொடை அனுப்புவதாக கடந்த ஜனவரி மாதமே ஜாக்மா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தொற்று நோயின் மையம்
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் நாடு தழுவிய பூட்டுதல்களை தற்போது தழுவியுள்ளன. குறிப்பாக இத்தாலியில் மட்டும் பரவி வரும் கொரோனாவால் 24,747 பேர் தாக்கம் அடைந்துள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் மார்ச் 1 முதல் இது மிக வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐரோப்பா தற்போது இந்த கொடிய தொற்று நோயின் மையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலகம் முழுக்க பரவல்
உலகத்தில் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் தற்போது சுமார் 118 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் தற்போது வேகமெடுத்து பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரிய அனுமதித்து வருகின்றன.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications