பாகிஸ்தான் : பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தொடர்ந்து எரிபொருள் விலையை அரசு உயர்த்தி வருகின்றது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அரசு எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. இது மேற்கொண்டு பாகிஸ்தான் பொருளாதாரத்தினை பதம் பார்க்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அடுத்த 15 நாட்களில் பெட்ரோல் விலையை 10 ரூபாய் முதல் 14 ரூபாய் வர உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சர் இஷாக்தார் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்கள் விலையானது அதிகரித்து வருகின்றது. இந்த சூழலில் பெட்ரோலிய செலவுகள் அதிகரிப்பு மற்றும் நாணய விகித மாறுபாடு காரணமாக தொடர்ந்து விலை அதிகரித்து வருகின்றது.
அடுத்த இலங்கையாக பாகிஸ்தான் மாறலாம் என நிபுணர்கள் கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் இன்னும் கடுமையான விலையேற்றத்தினை செய்து வருவது இன்னும் எந்த மாதிரியான சூழலை உருவாக்குமோ? என்ற அச்சம் இருந்து வருகின்றது.
ஏற்கனவே அத்தியாவசிய தேவைகளான உணவு பொருட்கள், தானியங்கள், எரிபொருட்கள், மருத்துவ பொருட்கள் என அனைத்தும் விலை உச்சத்தில் உள்ளது. இவற்றின் விலை கடுமையான உச்சத்தினை தற்போது வரையில் கண்டு வரும் சூழலில், இனியும் இந்த போக்கு தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

அன்னிய செலாவணியும் குறைந்துள்ளதால் தொடர்ந்து ஏற்றுமதிக்கு அரசு என்ன செய்யப்போகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இப்படி பற்பல நெருக்கடியான சூழலில் தான் பெட்ரோலிய பொருட்கள் விலையும் அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகின்றது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம். இது தேவை சரிவினையும் தூண்டலாம்.

மொத்தத்தில் பாகிஸ்தானில் விலை அதிகரிப்புக்கு மத்தியில் பெட்ரோல் விலை 286.77 ரூபாயாகவும், இதே மண்ணெய் லிட்டருக்கு 5.78 ரூபாய் அதிகரித்து, 186.07 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்றாலும், இது ஏற்கனவே லிட்டருக்கு 293 ரூபாய்க்கும், டீசல் விலை 174.68 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த விலை அதிகரிப்புக்கு மத்தியில் இந்த விலையேற்றம் இன்னும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஏற்கனவே பணவீக்கம் என்பது 35 சதவீதமாக இருந்த நிலையில், இது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது 2 சதவீதத்தில் இருந்து, 0.5% ஆக குறையலாம் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இது அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம் என பல்வேறு நெருக்கடிக்களுக்கு மத்தியில் இந்தளவுக்கு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications