பாகிஸ்தான் அரசு தனது தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) தனியார்மயக்கும் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது. இன்றைய வர்த்தக சந்தையில் விமான நிறுவனங்களை அரசு அமைப்புகள் தனியார் நிறுவனங்கள் நடத்துவது போல் மலிவு விலையில் நடத்தி லாபம் பார்ப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இதன் காரணமாகவே இந்திய அரசு சமீபத்தில் தனது ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை நீண்ட நெடிய ஆலோசனைக்கு பின்பு டாடா குழுமத்திற்கு விற்பனை செய்தது. இதே பாதையை தற்போது பாகிஸ்தான் அரசு பின்பற்றி பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) நிறுவனத்தை தனியார்மயக்கியுள்ளது.

பாகிஸ்தான் மோசமான பொருளாதாரத்தில் இருக்கும் காரணத்தால் அந்நாட்டு அரசு கடந்த 5 வருடத்தில் பல அரசு நிறுவனங்களையும், சொத்துக்களையும் விற்பனை செய்தோ அல்லது தனியார்மயமாக்கியோ உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் விமான சேவை போன்ற நிதி செலவு மிகுந்த சேவை பாகிஸ்தான் அரசால் தொடர்ந்து நடத்த முடியவில்லை, அதேபோல் இந்த ஏர்லையன்ஸ்-ன் சேவை தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனாலேயே தனியார்மயமாக்கும் முடிவை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகரில் இஸ்லாமாபாத்தில் நடந்த ஏலத்தில் உள்ளூர் முதலீட்டு நிறுவனம் தலைமையிலான கூட்டமைப்புக்கு 135 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய்க்கு கைப்பற்றியது. இது பாகிஸ்தான் அரசின் மிகப்பெரிய தனியார்மயமாக்கும் முயற்சியாகும்.
இந்த ஏலம் இரு கட்டங்களாக நடந்தது, முதலில் மூன்று தகுதி பெற்ற குழுக்கள் ஏலத்தில் தனது பிட்டிங்-ஐ முன்வைத்தன. லக்கி சிமென்ட், தனியார் விமான நிறுவனமான ஏர்ப்ளூ, முதலீட்டு நிறுவனமான அரிஃப் ஹபீப் ஆகியவை இந்த ஏலத்தில் பங்கேற்றன.
ஏல விண்ணப்பங்கள் திறக்கப்பட்ட போது அரிஃப் ஹபீப் ரூ.115 பில்லியன், லக்கி சிமென்ட் ரூ.105.5 பில்லியன், ஏர்ப்ளூ ரூ.26.5 பில்லியன் தொகையை குறிப்பிட்டன. இதன் பின்பு பாகிஸ்தான் அரசு குறைந்தபட்ச விலையாக ரூ.100 பில்லியன் என்று அறிவித்தது.
முதல் கட்டத்தில் அதிக ஏலம் வழங்கிய இரு குழுக்களுக்கு Open Auction-ல் போட்டிப்போட்டது. அரிஃப் ஹபீப் மற்றும் லக்கி சிமென்ட் கடுமையாக போட்டியிட்டன, இப்போட்டியில் படிப்படியாக விலை உயர்த்தின. இறுதியில் அரிஃப் ஹபீப் குழுமம் ரூ.135 பில்லியன் வழங்கியது. இதனால் போட்டியின்றி வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அரசு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்-ஐ(PIA)தனியார்மயமாக்கி நிதி சுமையை குறைக்க முயன்று வருகிறது. இதேவேளையில் ஏலத்தில் வென்ற அரிஃப் ஹபீப் இந்த விமான நிறுவனத்தில் புதிய முதலீடுகளை செய்ய உள்ளதால் நவீனமயமாக்கப்படும்.
More From GoodReturns

பாகிஸ்தானில் பெட்ரோல்-டீசல் விலை தடாலடி உயர்வு.. ஆப்கானிஸ்தான் தாக்குதல் மத்தியில் IMF கொடுத்த நெருக்கடி..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications