பாகிஸ்தானில் எரிபொருள் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 55 பாகிஸ்தான் ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 18 ரூபாய்) உயர்ந்து 321.17 ரூபாயாகவும், டீசல் 335.86 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இது பாகிஸ்தான் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச எண்ணெய் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் நாட்டின் ARY நியூஸ் தளம் தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தான் பொருளாதாரத்துக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.

எண்ணெய் விலை உயர்வு
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் எண்ணெய் சந்தையை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் அரசு இந்த விலை உயர்வை நுகர்வோருக்கு அப்படியே அளித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், "உலக எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் நுகர்வோருக்கு இதை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள போர் சூழல் எண்ணெய் விநியோகத்தை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
IMF கொடுத்த
பாகிஸ்தான் அரசு சுமார் 100 பில்லியன் டாலர் கடனில் சிக்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானிடம் தற்போதைய நிதி நிலையில் எரிபொருள் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று கடுமையான உத்தரவை விடுத்தது.
இந்த உத்தரவை, பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் IMF குழுவுக்கும் இடையே நடந்த ஆன்லைன் பேச்சுவார்த்தையில் கொடுக்கப்பட்டது. IMF-யின் இந்த உத்தரவால் பாகிஸ்தான் அரசு விலை உயர்வை அமல்படுத்தியுள்ளது. இது பாகிஸ்தான் மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் வேளையில் ஆப்கானிஸ்தான் உடனான தாக்குதல் பெரும் பிரச்சனையை உருவாக்கியது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பெட்ரோல் விலை உயர்வு அந்நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் பதற்றம்
விலை உயர்வு அறிவிக்கப்படுவதற்கு முன்பே லாகூர், கராச்சி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் மக்கள் வாகனத்துடன் நின்றனர். மக்கள் புதிய விலை அமலுக்கு வருவதற்கு முன் தங்கள் வாகனங்களை நிரப்ப முயன்றனர். இது மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications