பாகிஸ்தான் திவால் நிலைக்கு தள்ளப்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை, மோசமான பணவீக்கம், தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் கரன்சி மதிப்பு என பல காரணிகளுக்கு மத்தியில் திவால் நிலைக்கு தள்ளப்படலாம் என அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தான் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், 6 பில்லியன் டாலர் நிதி திரட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. எனினும் இதுவரையில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
அன்னிய செலாவணி கையிருப்பு
இதற்கிடையில் பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பானது ஜூன் 21 அன்றும் 212 ஐ தாண்டியது. அதேசமயம் இலங்கையை போலவே பாகிஸ்தானின் அன்னிய செலாவணி கையிருப்பும் குறைந்து வருகின்றது. இதனால் தற்போதைய நிலவரப்படி அன்னிய செலாவணி கையிருப்பு 9 பில்லியன் டாலருக்கு கீழாக உள்ளது.
பாகிஸ்தான் ரூபாய்
கடந்த ஆண்டிலேயே பாகிஸ்தானின் கரன்சி மதிப்பானது 34% சரிவினைக் கண்டுள்ளது. இது பெரியளவில் சரிவினைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் 157.54 பாகிஸ்தானிய ரூபாயாக இருந்தது. இதற்கிடையில் நடப்பு ஆண்டில் மோசமாக சரியும் நாணயங்களில் ஒன்றாக உள்ளது.
பலத்த சரிவில் நாணயம்
டிசம்பர் 2001ல் இருந்து இந்த கரன்சியின் மதிப்பானது 13 நாணயங்களுக்கு எதிராக 16.5% சரிவினைக் கண்டுள்ளது. ET அறிக்கையின் படி ஜப்பானிய யென், தென் கொரியாவின் வோன், பங்களாதேஷின் டாக்கா உள்ளிட்ட பலவும் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. அதில் பாகிஸ்தானின் ரூபாயும் ஒன்று.
நடப்பு கணக்கு பற்றாக்குறை
பணவீக்கம், கரன்சி வீழ்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு சரிவு என பல காரணிகளுக்கு மத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் மிக மோசமாக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் ஸ்டேட் பாங்க் கையிருப்பும் நவம்பர் 2019ல் இருந்து மோசமான சரிவினைக் கண்டுள்ளது. அதோடு பாகிஸ்தானின் மக்கள் தொகையும் அதன் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையை ஏற்று மூன்றாவது முறையாக எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலை அதிகரிப்பின் மத்தியில் பாகிஸ்தானில் பல சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல் விலை மட்டும் 56% உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலையானது 83% அதிகரித்துள்ளது. இது சாமானிய மக்கள் மீது பெரும் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சீனா விருப்பம்
இது எல்லாவற்றிற்கும் மத்தியில் பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலர் மேல், புதிய வணிக கடன்களை வழங்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்கம், எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதது, சிறு வணிகங்கள் மூடப்படுவது மற்றும் மோசமான அரசியல் நெருக்கடி ஆகியவை பாகிஸ்தானின் மோசமான சரிவினைக் கண்டது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications