இன்றைய உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவே கொரோனா வைரஸினால், படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறது.
இதே அமெரிக்காவுக்கு அடுத்து போட்டி நாடான சீனாவோ தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது.
இன்னும் சொல்லவேண்டுமானால் இந்த உலகிற்கே வைரஸினை பரப்பிய சீனா, தற்போது இயல்பு நிலையில் உள்ளது அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது எனலாம்.
ட்ரம்ப் எச்சரிக்கை
இது ஒரு புறம் போயிக் கொண்டு இருந்தாலும், ஏற்கனவே வர்த்தகத் போரிலிருந்தே சீனாவினைக் கண்கானித்து வரும் அமெரிக்கா, தற்போது இந்த வைரஸிம் வேண்டுமென்றே பரப்பப்பட்டிருக்கலாம் என்றும் ஏற்கனவே கூறியது. அதுமட்டும் அல்ல, கொரோனாவினை சீனா தான் பரப்பியது என்று தெரியவந்தால் அதற்கு தக்க விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்பும் எச்சரித்திருந்தார்.
அழுத்தம் அதிகரித்து வருகிறது
இதற்கிடையில் தற்போது சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்து தங்களிடம் இருந்து, தங்களின் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவை கையாள்வதில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், அமெரிக்கா உள்பட பல நாடுகளிலும் அழுத்தம் அதிகரித்து வருகிறது.
கொரோனா பாதிப்பு
கொரோனாவின் தாக்கம் உலகெங்கிலும் தற்போது 30 லட்சத்தினை நெருங்கும் நிலையில் உள்ளது. இதே பலி எண்ணிக்கையானது 2 லட்சத்தினையும் தாண்டியுள்ளது. அதிலும் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் 9,60,651 பேருக்கும் கொரோனாவின் தாக்கம் உள்ளது. இதே இறப்பு எண்ணிக்கையானது 54,256 பேராக உள்ளது. இதே இதனை பரப்பிய சீனாவில் பாதிப்பு 82,816 ஆகவும், பலி எண்ணிக்கை 4,632 ஆகவும் உள்ளது.
கொரோனா எப்படி பரவியது?
கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் மாகாணத்தில் உள்ள வைரலாஜி ஆய்வகத்தில் இருந்து இந்த கொடிய வைரஸ் வெளிபட்டிருக்கலாம் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் கடந்த வியாழக்கிழமையன்று பாம்பியோ சீன கம்யூனிஸ்ட் கட்சி அவர்கள் செய்ததற்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று நான் நம்புகிறேன்.
சீனா பதில் கொடுக்க வேண்டும்
நிச்சயமான அமெரிக்காவில் இருந்து அது எவ்வளவை எடுத்துக் கொள்ளும் என்றூ தெரியவில்லை, ஆனால் சீனா இதற்கெல்லாம் பதில் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் பாம்பியோ பாக்ஸ் நியூஸிடம் கூறியுள்ளார். ஏற்கனவே அதிபர் ட்ரம்ப் சீனாவினை பலவகையிலும் எச்சரிந்திருந்த நிலையில், தற்போது மேலும் மேலும் சீனா - அமெரிக்கா இடையே விரிசல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை
எப்படி எனினும் தற்போது சீனா மீது கவனம் செலுத்தவில்லை. ஏனெனில் அமெரிக்காவின் குறிக்கோள் எப்படி இந்த வைரஸினை கட்டுக்குள் கொண்டு வந்து, அமெரிக்கா பொருளாதாரத்தினை புதுப்பிப்பது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் நாங்கள் அமெரிக்கார்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். சுகாதார பிரச்சனையை அதிகரித்து, மக்களை முடிந்தவரை சுகாதாரத்துடன் வைத்துள்ளோம். ஆக இது பொருளாதாரத்தினை திரும்ப வழிவகுக்கும் என்றும் பாம்பியோ கூறியுள்ளார்.
சீனா மறைக்கிறது
ஆனால் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன், நாடு முழுவதிலும் உள்ள வணிகர்களுடன் பேசிக் கொண்டு இருக்கிறேன். சாதாரண குடி மக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். மேலும் சீனா சரியான தகவலை பகிர்ந்து கொள்ளாததால், இது உலக நாடுகளுக்கே சவாலாக இருந்து வருகிறது. பெரும் பொருளாதார இழப்பு மற்றும் உயிர் இழப்பையும் சந்தித்து வருகிறது. சீனா கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து எங்களுக்கு தெரியாத விஷயங்கள் பல உள்ளன.
இது பெரும் சவால்
எங்களுக்கு இன்னும் வெளிப்படைத்தன்மை இல்லை. இது ஒரு தொடர்ச்சியான பெரும் சவாலாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சியும் உலக சுகாதார அமைப்பும் தங்கள் நாட்டிற்குள் ஒரு தொற்று நோயைக் கொண்டிருக்கும் போது அவர்கள் செய்ய வேண்டியதை செய்யத் தவறிவிட்டனர் என்றும் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.