ஏஜமான்.. உங்களுக்கே இந்த நிலைமையா..?!! ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பணிநீக்கம்..!!

உலகின் ஆடம்பர கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக விளங்கும் ரோல்ஸ் ராய்ஸ், கடந்த சில வருடங்களாக டெஸ்லா-வின் வெற்றியை தொடர்ந்து எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் இறங்கியது. இதன் மூலம் சமீபத்தில் ஸ்பெக்டர் கார் அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் ஹோல்டிங்ஸ் அதன் புதிய தலைமை நிர்வாகியின் கீழ் இந்நிறுவனம் செலவின குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக விரைவில் சுமார் 2,500 ஊழியர்களை பணிநீக்க செய்ய உள்ளது ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.

ஏஜமான்.. உங்களுக்கே இந்த நிலைமையா..?!! ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பணிநீக்கம்..!!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஒவ்வொரு கார்களையும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரும் பணக்காரர்களுக்கு உயர்தரத்தில் கஸ்டமைஸ் செய்து அளிக்கும் சேவைகளை அளித்து வருகிறது. ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஆடம்பர பிரிவில் வந்தாலும், இந்நிறுவன கார்களின் செயல்திறனிலும் பெயர்போனது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 2023 மே மாதத்தில் பணிநீக்கம் செய்வதாக சண்டே டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், அதன் பணியாளர்களில் மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று விளக்கம் கொடுத்தது. இதனால் பணிநீக்கம் இல்லாமல் மே மாதம் ஊழியர்கள் தப்பித்தனர்.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள 2500 ஊழியர்கள் பணிநீக்கம் அறிவிப்பில் அதிகப்படியான பணிநீக்கம் என்ஜின் தயாரிப்பின் உலகளாவிய செயல்பாடுகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிநீக்கம் மூலம் நூற்றுக்கணக்கான இங்கிலாந்து ஊழியர்களை பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றிய நிலையில் என்ஜின் தயாரிப்பு பிரிவில் பணிநீக்கம் நடக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் கார்கள் பெட்ரோல் கார்களை காட்டிலும் சிறப்பான செயல்திறனையும், அதிகப்படியான டெக் சேவைகளையும் வழங்க கூடியதாக மாறியிருக்கும் வேளையில் இந்த பணிநீக்கம் வருகிறது. மேலும் ரோல்ஸ் ராய்ஸ் முழு எலக்ட்ரிக் கார் நிறுவனமாகவும் மாற திட்டமிட்டு உள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் Tufan Erginbilgic தலைமையில் வேகமாக வர்த்தகத்திலும், வருவாயிலும் மீண்டு வருகிறது. இவர் கடந்த ஜனவரி மாதம் CEO ஆக பொறுப்பேற்றார், இந்த பதவிக்கு வந்த நாளில் இருந்து பணவீக்க பாதிப்புகளை ஈடுசெய்ய நிறுவனத்தின் செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அதிரடியாக செயல்படுத்தி வருகிறார்.

Rolls Royce Spectre கார் மார்ச் 2024ல் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் வேளையில், இந்தியாவில் இந்த காரின் மதிப்பு சுமார் 9 கோடி ரூபாயில் துவங்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆடம்பரமான காரின் ரிவ்யூவ்-யை பலரே ஏற்கனவே செய்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+