உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பிப்ரவரி மாதம் முதல் போர் தாக்கம் இருந்து வரும் நிலையில், மேற்கத்திய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. விலை உச்ச வரம்பு 60 டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரஷ்யா அதற்கு எதிர்ப்பினை காட்டியது.
ஒரு நாளைக்கு கச்சா எண்ணெய் விலை 5,00,000 முதல் 7,00,000 பேரல்களாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.
இது அதன் உற்பத்தியில் 5 - 7% குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உற்பத்தி குறைப்பானது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்தான ஆவணத்திலும் கையெழுத்தாகலாம் என தெரிகிறது.
ரஷ்யாவின் இந்த முடிவு வெளியான நிலையில், கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 2.7% அதிகரித்து 83.87 டாலர்களாக அதிகரித்து காணப்பட்டது. இதே வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியேட் கச்சா எண்ணெய் விலையானது 2.8% அதிகரித்து, 79.69 டாலர்களாக உச்சம் தொட்டது.
எப்படியேனும் முடக்கிவிட வேண்டும்
ரஷ்யாவினை எப்படியேனும் முடக்கிவிட வேண்டும் என கூறிவரும் மேற்கத்திய நாடுகள் மத்தியில், இது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஒரு கட்டத்தில் ரஷ்ய எண்ணெயை யாரும் வாங்க கூடாது என்று கூறப்பட்ட நிலையில், மறுபுறம் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் சலுகை விலையில் எண்ணெய் வாங்கின. இதற்கிடையில் ரஷ்யா எப்போதும் போல இல்லாவிட்டாலும் ஒரளவுக்கு விற்பனையை செய்து வந்தது.
ஏமாற்றத்தில் மேற்கத்திய நாடுகள்
ஆனால் மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவின் எண்ணெயை பயன்படுத்த வேண்டும். அதுவும் குறைந்த விலையில் பயன்படுத்த வேண்டும் என திட்டமிட்டு, அதற்கு ஜி7 நாடுகளின் விலை உச்ச வரம்பானது பயன்படலாம் என எதிர்பார்த்தன. ஆனால் ரஷ்யா இப்படி ஒரு முடிவினை எடுக்கும் என மேற்கத்திய நாடுகள் நினைத்திருக்காது எனலாம்.
உற்பத்தி குறைப்பு
ஜி7 நாடுகளின் விலை உச்ச வரம்பால் பாதிக்கப்படுவதற்கு, அதற்கு உற்பத்தியினை குறைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு ரஷ்யா வந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ரஷ்யா இப்படி ஒரு முடிவினை எடுக்கும் என மேற்கத்திய நாடுகள் எதிர்பார்க்காது. ரஷ்யாவின் இந்த முடிவால் மேற்கத்திய நாடுகள் மட்டும் அல்ல, சர்வதேச நாடுகள் அனைத்துமே பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாடுகளுக்கு தான் பாதிப்பு
ஏனெனில் இந்த முடிவுக்கு வந்திருப்பதால் தகவல்கள் வெளியான நிலையிலேயே, கச்சா எண்ணெய் விலையானது உச்சம் எட்டியது. இந்த அறிவிப்பானது நடைமுறைக்கு வந்தால், பழையபடி கச்சா எண்ணெய் 100 டாலர்களுக்கு மேலாக ஏற்றம் காணலாம். இதனால் சர்வதேச நாடுகள் அனைத்தும் பாதிக்கப்படலாம் எனலாம்.
இப்படி நடக்குமா?
ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு இடையே எப்படியேனும், இப்பிரச்சனையை நிறுத்த வேண்டும் என்று கூறி வரும் நிலையில், இத்தகைய முடிவுகள் வந்தாலும், இன்று வரையிலும் ரஷ்யா சில நாடுகளுக்கு சப்ளை செய்து கொண்டு தான் உள்ளது. இதன் காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரமும் ஒரளவுக்கு வளர்ச்சி கண்டு கொண்டு தான் உள்ளது. ரஷ்யாவினை தங்கள் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேசமயம் வளர்ச்சி காண விடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருந்து வருகின்றன. ஆனால் இவர்களுக்கு எல்லாம் அல்வா கொடுக்கும் விதமாக ரஷ்யா இப்படி ஒரு முடிவினை எடுக்கும் என யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.
More From GoodReturns

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

எரியும் நெருப்பில் எண்ணெய்! நயாராவின் 35 நாள் முடக்கம்.. இந்தியாவின் நிலை என்னவாகும்?

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications