உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்தன. மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையும் மேற்கத்திய நாடுகள் நிறுத்திக் கொண்டன.
இந்த நெருக்கடிகள் காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம் சிக்கலை சந்தித்தது. ஆனால் இந்த சூழலை சரியாக பயன்படுத்தி கொண்டு பெரிய அளவில் கல்லா கட்டியுள்ளது ரஷ்யா.

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு ரஷ்யாவிற்கு மேற்கத்திய நாடுகள் மறைமுக அழுத்தம் கொடுத்தன, இதில் முக்கியமானது பொருளாதார தடை.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை காரணமாக ரஷ்யாவில் செயல்பட்டு வந்த பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கு தொழிலை கைவிட்டு வெளியேறும் நிலைக்கு ஆளாகின. இந்நிலையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக ரஷ்ய அரசு கூடுதல் வரிகளை விதித்தது.
இவ்வாறு கூடுதல் வரி விதித்ததன் மூலம் 2024 ஆம் ஆண்டு 385 மில்லியன் டாலர்களை ரஷ்யா பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. தங்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் நிறுவனங்களுக்கு பல்வேறு கடுமையான நிபந்தனைகளை ரஷ்ய அரசு விதித்தது.
அரசு முகமையிடமிருந்து உரிய ஒப்புதலை பெற வேண்டும் ,தங்கள் நிறுவனத்திலிருந்து விற்பனை செய்யும் பொருட்கள் அல்லது சொத்துக்களை 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை ரஷ்ய அரசு வெளியிட்டது. அமெரிக்கா இதனை எக்ஸிட் டாக்ஸ் என அழைக்கிறது.
இந்த எக்ஸிட் டாக்ஸ் மூலம் மட்டும் ரஷ்யாவின் நிதிநிலைக்கு 10 விழுக்காடு நிதி வந்துள்ளது தெரியவந்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் சந்தையில் இருந்து வெளியேற உதவும் பரிவர்த்தனைகளுக்காக ரஷ்ய வங்கிகள் 5.4 பில்லியன் டாலர்களை கடனாக கொடுத்துள்ளது என ரஷ்யாவின் மதிய வங்கி அறிவித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான தாக்குதல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது. மேற்கத்திய நாடுகளின் எந்த மிரட்டலுக்கும் அடிபணியாமல் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதனால் பொருளாதார தடைகளை சந்திக்கும் போதிலும் மாற்று வழிகளை அதனை சரி செய்யும் பணிகளை ரஷ்யா மேற்கொண்டுள்ளது.
டாலரை விடுத்து உள்நாட்டு நாணயங்களில் வர்த்தகம் செய்வது, குறிப்பாக கச்சா எண்ணெய் விற்பனையில் தள்ளுபடி அறிவிப்பது போன்ற வழிமுறைகளை கையாண்டு ரஷ்யா தனது பொருளாதாரத்தை நிலை நிறுத்தி கொண்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications