உக்ரைன் தலைநகரான கீவ் நகரம் இன்று காலையில் ரஷ்யாவின் பெரும் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் நகரின் முக்கிய பகுதியில் பலத்த குண்டு வெடிப்பு ஒலியுடன் மக்கள் எழுந்தனர். உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த ஏவுகணைகளை தடுத்தாலும் சில பாதிப்புகளை எதிர்கொண்டதாக தெரிகிறது.
உக்ரைன் ராணுவம், டெலிகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில் ரஷ்யா குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தது. ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையும் டெலிகிராம் தளத்தில் பரவிய பல்வேறு தகவல் அடிப்படையில் இதை உறுதி செய்துள்ளது.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இப்போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்த விவரங்களை திட்டமிட்டும் சந்திப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உயிரிழக்க வேண்டும் என்பதே இப்போது ஒட்டுமொத்த உக்ரைனின் விருப்பமாக இருப்பதாக ஜெலன்ஸ்கி கூறியிருந்தார், இது இரு நாடுகள் மத்தியிலான தாக்குதலை அதிகரித்துள்ளது.
ஜெலன்ஸ்கி டிரம்புடன் ஃப்ளோரிடாவில் டிசம்பர் 28 அல்லது 29ஆம் தேதி சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பில் உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீவ் நகரில் தாக்குதல் தொடங்கியதும் வான் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தது, இதை தொடர்ந்து மக்கள் அனைவரும் பாதுகாப்பு அறைகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். டெலிகிராம் சேனல்களில் குண்டு வெடிப்புகள் குறித்த செய்திகள் பரவின. உக்ரைன் ராணுவ டெலிகிராம் சேனல் ஒன்று ஏவுகணைகள் நகரை நோக்கி செலுத்தப்பட்டதாக தெரிவித்தது. இந்த தாக்குதல் கடந்த சில நாட்களாக ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாக உள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அமெரிக்கா தலைமையில் போர் முடிவுக்கு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஜெலன்ஸ்கி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து 20 புள்ளிகள் கொண்ட அமைதி திட்டத்தை தயாரித்துள்ளார். இதில் பிராந்திய பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் முக்கியமானதாக உள்ளது. ரஷ்யா இந்த திட்டத்தை ஏற்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
More From GoodReturns

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

கத்தார் வாழ் இந்தியர்களே கவனம்!! வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!! #Iranwar

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!



Click it and Unblock the Notifications