சவுதி அரேபியா ரியாத் ஏர் என்ற புதிய விமான சேவையை தொடங்க இருப்பதாக அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சவுதி அரேபியா அரசின் புதிய விமான சேவை நிறுவனத்தின் பெயர் ரியாத் ஏர், அரபு நாடுகள் பெரும்பாலான விமான சேவை நிறுவனங்களை நடந்தி வரும் நிலையில் சவுதி அரேபிய அரசும் இத்துறையில் இறங்கியுள்ளது.
ரியாத் ஏர் மூலம் ஆசிய, ஆப்பரிக்க, ஐரோப்பிய கண்டங்களுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்தவும், உலகளாவிய சுற்றுலாவிற்கான நுழைவு வாயிலாகவும் இருக்கும் என PIF அறிக்கை கூறுகிறது.
போட்டி உலகில் நுழைந்த சவுதி அரேபியா!
அதிகம் போட்டி நிறைந்த விமானப் போக்குவரத்துத் துறையில் சவுதி அரேபியா நுழைந்துள்ளது. மேலும் ரியாத் ஏர்லைன்ஸ், ஏற்கனவே உள்ள விமான நிறுவனங்களான எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் மற்றும் துருக்கி ஏர்லைன்ஸ் போன்றவற்றிக்கு போட்டியாக இருக்கும்.
பிஐஎஃப் (Public Investment Fund)
இந்த ஏர்லைன் வணிகம் முழுக்க முழுக்க சவுதியின் Public Investment Fundக்கு சொந்தமானதாகும். PIF சுமார் 600 பில்லியன் டாலருக்கும் மேலான சொத்துக்களை முதலீடு செய்து நிர்வாகம் செய்து வருகிறது. இது சவுதி அரேபியா அரசின் சொந்த முதலீட்டு நிறுவனமாகும்.
சிஇஓ
இந்த நிலையில் ரியாத் ஏர் நிறுவனம் பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்ட்-ல் தான் இந்த ஏர்லைனின் உரிமை இருக்கப் போகிறது. பப்ளிக் முதலீட்டு நிதியத்தின் கவர்னர் யாசிர் அல் ருமாயனும், சிஇஓவாக டோனி டக்லஸும் நியமிக்கப்பட்டனர்.
இலக்கு!
2030 ஆம் ஆண்டுக்குள் 100 க்கும் மேற்பட்ட இடங்களை இணைக்க ரியாத் ஏர்லைன் விமான நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளின் விமான சேவையில் பெரும் போட்டி உருவாகியுள்ளது.
சீக்ரெட் டீல்ஸ்!
சென்ற ஆண்டு அக்டோபரில் சவுதி அரசு ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஏறக்குறைய 40 ஏ350 ஜெட் விமானங்களை ஆர்டர் செய்யும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விமானங்களின் மதிப்பு 30 பில்லியன் டாலராகும்.
சவுதி அரசு
சவுதி அரசுக்கு சொந்தமான Saudia என்னும் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ், போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுடன் புதிய விமான நிறுவனத்திற்கு விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை துவங்கியது மட்டும் அல்லாமல் விரைவாக முடிக்கவும் திட்டமிட்டு உள்ளது.
கூடுதல் வருமானம்!
சவுதி அரேபியா நாட்டின் பொருளாதாரம் கச்சா எண்ணெய் அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஏர்லைன் மூலம் 20 பில்லியனை டாலர் வருமானம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியாத் ஏர் உருவாக்கப்படுவது மூலம் சுமார் 200,000 க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications