பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் கச்சா எண்ணெய் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் சவுதி அரேபியா, 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பை வெளியிட்டு உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
முகமத் பின் சன்மான்
சவுதி அரேபியா தற்போது அடுத்தத் தலைமுறைக்கான நாட்டையும், கலாச்சாரத்தையும் உருவாக்கும் பணியில் மிக ஸ்திரமான நிலையில் முகமத் பின் சன்மானின் அறிவுறுத்தல் படி இயங்கி வருகிறது.
நிதி நெருக்கடி
கச்சா எண்ணெய் விலை சரிவால் ஏற்பட்ட மிகப்பெரிய நிதி நெருக்கடியில் தற்போது மீண்டு வந்து கொண்டு இருக்கும் நிலையில் 2018ஆம் ஆண்டுப் பட்ஜெட் அறிவிப்பு இந்நாட்டு மக்கள் மற்றும் வர்த்தகச் சந்தையில் மகிழ்ச்சியை அறிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு
சவுதி அரேபியா கடந்த வருடம் 250 பில்லியன் டாலர் அளவிலான பட்ஜெட்டை அறிவித்தது. இந்நிலையில் இந்த வருடம் கடுமையான நிதி நெருக்கடி சூழ்நிலையிலும் பட்ஜெட் அளவீட்டை உயர்த்தியுள்ளது.
2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் 261 பில்லியன் டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் 2018ஆம் ஆண்டில் 209 பில்லியன் டாலர் அளவிலான வருவாய் கிடைக்கும் என்றும் இந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வளர்ச்சி
சவுதி அரேபியா இனி வரும் காலத்தில் பெரிய அளவிலான வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கும் நிலையில் வளர்ச்சிக்கு ஏதுவான சூழ்நிலையும், பாதையும் அமைத்துத் தரும் வகையில் இந்தப் பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா
சவுதி அரேபியாவின் பட்ஜெட் அளவை விடவும் அதிகமாக ஐரோப்பாவில் வெறும் 6 நாடுகள் மட்டுமே அறிவித்துள்ளது.
பங்குச்சந்தை
மேலும் சவுதியின் அரசு கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஆராம்கோ பங்குச்சந்தையில் இறங்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 100 பில்லியன் டாலர் வரையிலான தொகையை நிதிதிரட்ட முடியும்.