சவுதி அரேபியாவின் பங்குச்சந்தையைத் தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் புதன்கிழமை முடங்கியது. இந்தச் செய்தி சவுதி அரேபிய முதலீட்டாளர்களை மட்டும் அல்லாமல் வளைகுடா நாடுகளில் இருக்கும் அனைத்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
சவுதி அரேபியாவின் Tadawul பங்குச்சந்தை விளக்க முடியாத தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது என அறிவிப்பு வெளியானது. சுமார் 30 நிமிடத்திற்கு அதிகமான நேரம் தொழில்நுட்ப கோளாறு-ஐ சரி செய்ய முடியாமல் மக்கள் தவித்தனர்.
30 நிமிடங்களுக்குப் பின் மீண்டும் சவுதி அரேபியாவின் Tadawul பங்குச்சந்தை இயங்க துவங்கியது, ஆனால் Tadawul பங்குச்சந்தை அமைப்பால் என்ன காரணம் என விளக்க முடியாத காரணத்தால் அரசு தொலைக்காட்சியில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படாமலேயே இருந்தது.
உலகளவில் பங்குச்சந்தை வர்த்தகம் அனைத்தும் பேப்பர் வர்த்தகத்தில் டிஜிட்டல் வர்த்தக முறைக்கு மாறிவிட்டது. இந்த மாற்றத்தில் எந்த அளவிற்கு நன்மை உள்ளதோ, அதே அளவிற்குப் பிரச்சனையும் உண்டு.
இந்த வகையில் இன்று சவுதி அரேபியாவின் Tadawul பங்குச்சந்தை முடங்கியது போல் 2020 அக்டோபர் மாதம் உலகிலேயே 3வது மிகப்பெரிய பங்குச்சந்தை வர்த்தகத்தைக் கொண்டு இருக்கும் ஜப்பான் பங்குச்சந்தை தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்தம்பித்துப் போனது.