உலகிற்கு கொரோனாவை அறிமுகப்படுத்திய டிராகன் தேசம், கடந்த 2 மாதங்களாக லாக்டவுனால் சிக்கி சீரழிந்து வந்தது. இதன் காரணமாக உலக நாடுகளில் மூலதன பொருட்கள் பற்றாக்குறையால் பணவீக்கம் மிகப்பெரியளவில் உச்சம் தொட்டது.
இது பொருளாதாரத்தில் மிகப் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இரு மாதங்களுக்கு பிறகு லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் இனி வரவிருக்கும் மாதங்களில் மீண்டும் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்கு வரத்து தொடக்கம்
குறிப்பாக பொது போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இது மக்கள் வேலைக்கு செல்ல முடியும். எனினும் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒவ்வொரு 72 மணி நேரத்திற்கும் ஒரு முறை கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட வேண்டும். ஒரு வேலை பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர் தனிமைப்படுத்தப்படுவார்.
முகக் கவசம் கட்டாயம்
அதோடு சீனாவின் மிக முக்கியமான உற்பத்தி நகரமான ஷாங்காயில் முகக்கவசம் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் ஒன்று கூடுவதையும் தவிர்க்க வேண்டும். உணவகங்களுக்குள் அமர்ந்து உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகள் 75% திறனில் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதற்கெல்லாம் அனுமதி?
பள்ளிகளுக்கு மாணவர்கள் விருப்ப அடிப்படையில் வரலாம். ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்கெட்கள் பலவிதமான கட்டுப்பாடுகளுடன் மக்களின் தேவைக்காக திறக்கப்பட்டுள்ளது. மருந்து கடைகளும் மொத்த திறனில் 75% திறனுடன் திறக்கப்படும். சினிமா தியேட்டர்கள், ஜிம்கள் வழக்கம்போல மூடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
சில குடியிருப்பாளர்களுக்கு பாஸ்களுடன் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது மார்ச் மாத இறுதிக்கு பிறகு நகரத்திற்கு சுதந்திரமாக பயணம் செய்ய முடியும்.
ஏப்ரல் மாதத்தில் தினசரி 20,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜீரோ கோவிட் பாலிசி
சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது லாக்டவுனில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சப்ளை சங்கிலியில் ஏற்பட்டிருந்த பிரச்சனை முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் இந்தியா போன்ற இறக்குமதி நாடுகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை பிரச்சனை முடிவுக்கு வரலாம் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications