இலங்கையின் மோசமான நிலை என்பது எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. அத்தியாவசிய பொருட்களுக்கே அதிக விலை கொடுத்தாலும், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய மோசமான சூழல்.
அன்னிய செலவாணி பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை தவித்து வருகின்றது.
குறிப்பாக அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறியுள்ள எரிபொருளுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
கல்வி நிலையங்கள் இயங்காது
அதோடு ஜூலை 10ம் தேதி வரையில் நகர்ப்புற கல்வி நிலையங்கள் இயங்காது என்றும், ஏனைய அனைத்து சேவைகளையும் முடக்குவதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் போக்குவரத்து சேவையிலும் பல மாற்றங்கள் செய்துள்ளதாகவும், இதனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கல்வி நிலையங்கள் இயங்காது
அதோடு ஜூலை 10ம் தேதி வரையில் நகர்புற கல்வி நிலையங்கள் இயங்காது என்றும், ஏனைய அனைத்து சேவைகளையும் முடக்குவதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் போக்குவரத்து சேவையிலும் பல மாற்றங்கள் செய்துள்ளதாகவும், இதனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அத்தியாவசிய தேவைக்கு மட்டும்
இலங்கையின் அத்தியாவசிய தேவை பட்டியலில் சுகாதாரம், சட்டம் மற்றும் ஒழுங்கு, துறைமுகங்கள், விமான நிலையம், உணவு சப்ளை மற்றும் விவசாயம் என பலவும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள எரிபொருள் இருப்பு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. எரிபொருள்களை விற்பனை செய்ய அரசு டோக்கன் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவே முதல் முறை
பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகளும் வீட்டில் இருந்தே பணியை செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 22 மில்லியன் மக்கள் வசிக்கும் தீவு நாட்டில், இந்த அளவுக்கு எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது இதுவே முதல் முறை. எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் விலையும் 5 மடங்கு அதிகரித்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்?
கடைசியாக நேற்றும் கூட விலை உயர்ந்துள்ளது. இங்கு டீசல் விலை 460 இலங்கை ரூபாய்க்கும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 550 இலங்கை ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் இது வரையில் இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதிக்கான எந்த அறிகுறியும் இல்லை. ஏற்கனவே வாங்கிய எண்ணெய்க்கே பணம் செலுத்தாததால் இறக்குமதியாளர்கள், இனியும் கடனாக இறக்குமதி செய்வார்களா? என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications