சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுவது எரிபொருள் விலை அதிகரிப்பு தான்.
வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே எரிபொருள் விலை அதிகரிப்பால், 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. அந்தளவுக்கு எரிபொருள் விலையானது உச்சம் தொட்டுள்ளது.
இதற்கிடையில் ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமானது நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், இன்னும் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது.
எரிபொருள் விலை அதிகரிக்கலாம்
இது இனி வரும் வாரங்களிலும் உச்சம் தொடலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பினால், சர்வதேச அளவில் எரிபொருள் விலையானது உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இறக்குமதி நாடுகள் கச்சா எண்ணெயை இன்னும் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் இன்னும் எரிபொருள் விலையானது உச்சம் தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலோன் பெட்ரோலியம் விலை அதிகரிப்பு
இதற்கிடையில் இந்தியாவின் முன்னணி எரிபொருள் நிறுவனமான இந்திய ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இலங்கையின் உள்ளூர் துணை நிறுவனமான இலங்கையின் லங்கா ஐஓசியும் விலையை உயர்த்தியுள்ளது. இதனையடுத்து இலங்கையின் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியமும் விலையை அதிகரித்துள்ளது.
எவ்வளவு விலை அதிகரிப்பு?
ஏற்கனவே இலங்கையில் கடந்த 1 மாதமாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதற்கிடையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் உள்ளூர் நிறுவனங்களும் விலையை அதிகரித்துள்ள நிலையில், சிலோன் நிறுவனமும் விலையை அதிகரித்துள்ளது. இது பெட்ரோல் விலையை 77 ரூபாயும், டீசல் விலையை 55 ரூபாயும் அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் டீசல் விலையை 50 ரூபாயாகவும், பெட்ரோல் விலையை 75 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் அங்கு 92 ஓக்டோன் ரக பெட்ரோல் விலை 43.5% அதிகரித்து, 254 ரூபாயாகவும், இதெ டீசல் விலை 45.5% அதிகரித்து 176 ரூபாயாவும் அதிகரித்துள்ளது.
பொருளாதார மந்தம்
கடும் பொருளாதார மந்த நிலையில் உள்ள இலங்கையில் ஏற்கனவே பல மணி நேரம் மின்சார பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதற்கிடையில் அங்கு எரிபொருளுக்கும் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக, உக்ரைன் ரஷ்யா பதற்றத்தினால் கச்சா எண்ணெய்-க்கு அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது இன்னும் விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்தியாவின் நிலை?
இந்தியாவினை பொறுத்தவரையில் 5 மாநில தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களாகவே எரிபொருள் விலையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. எனினும் இனி வரும் வாரங்களில் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

50 பைசா சரிவு.. ஆடிப்போன இந்தியா.. ஈரான் போரால் இனி என்னவெல்லாம் நடக்குமோ..?!

ரிலையன்ஸ் முதல் ஜேகே டயர்ஸ் வரை..அடி வாங்கும் முக்கிய பங்குகள்! உங்க லிஸ்டில் ஏதும் இருக்கா?

SBI முதல் BoB வரை..பொதுத்துறை வங்கி பங்குகளில் ஏன் ரத்த ஆறு? முக்கிய காரணங்கள்இதோ?

OMCs பங்குகளுக்கு செக் வைத்த கச்சா எண்ணெய்! BPCL,HPCL பங்குகள் கடும் வீழ்ச்சி:யுபிஎஸ் கொடுத்த ஷாக்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்



Click it and Unblock the Notifications