பொருளாதாரச் சரிவாலும், விலைவாசி உயர்வாலும் தவித்து வரும் இலங்கை-யிடம் அத்தியாவசிய பொருட்களை வெளிநாட்டிலிருந்து வாங்குவதற்காகப் போதுமான அன்னிய செலாவணி இல்லாத நிலையில், இந்தியக் கடன் அடிப்படையில் டீசல், பெட்ரோலை இலங்கைக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில் இலங்கைக்குச் சாதகமாக உலக வங்கி வெளியிட்ட அறிவிப்பு மூலம் அந்நாட்டு அரசு, மக்கள், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
உலக வங்கி உதவி
அத்தியாவசிய பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கான நிதியியல் தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்காக இலங்கைக்குச் சுமார் 600 மில்லியன் டாலர் அளவிலான கடனை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.
600 மில்லியன் டாலர்
இந்த 600 மில்லியன் டாலர் கடனில் முதல் பகுதியாக 400 மில்லியன் டாலர் அளவிலான பணத்தை உலக வங்கி விரைவில் இலங்கைக்கு அளிக்கும் என இலங்கை அதிபர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்குத் தொடர்ந்து உதவுவதாக உலக வங்கி கூறியுள்ளது.
இலங்கை பங்குச்சந்தை
2 வாரம் மூடப்பட்டு இருந்த இலங்கை பங்குச்சந்தை கடந்த 2 நாட்களாக அதிகப்படியான சரிவை எதிர்கொண்ட நிலையில் வர்த்தகம் துவங்கிய சில மணிநேரத்தில் மூடப்பட்டது. இதனால் அந்நாட்டுப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டனர்.
5 சதவீதம் உயர்வு
இந்த நிலையில் உலக வங்கியின் அறிவிப்பைத் தொடர்ந்து கொழும்பு அனைத்துப் பங்குகள் குறியீடு 5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. 2 நாட்களாக 15 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்த இலங்கை பங்குச்சந்தைக்கு இன்றைய உயர்வு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதேபோல் S&P 20 பங்குகள் கொண்ட குறியீடு இன்று 7 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்தது.
நிதி நெருக்கடி
1948 ஆம் ஆண்டுச் சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கையின் மிக மோசமான நிதி நெருக்கடியை தற்போது சந்தித்து வருகிறது. இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த இரண்டு வருடங்களில் 70 வீதமாக வீழ்ச்சியடைந்து மார்ச் மாத இறுதியில் 1.93 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள்
இதன் மூலம் எரிபொருள், மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் இலங்கை தவித்து வந்த நிலையில் தான் உலக வங்கி சுமார் 600 மில்லியன் டாலர் அளவிலான கடன் உதவியை அறிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications