துபாய் & வாசிங்டன்: நேற்று (ஜூலை 19, 2019) காலை 23 பேர் கொண்ட, Stena Impero என்கிற இங்கிலாந்து நாட்டு எண்ணெய் டேங்கரை ஈரான் கடத்தி விட்டதாக, கப்பலின் உரிமையாளரான Stena Bulk நிறுவனம் சொல்லி இருக்கிறது . இந்த 23 பேரில் இந்தியர்கள், ரஷ்யர்கள், லாத்வேனியர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் என மற்ற நாடுகளையும் சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறது Stena Bulk நிறுவனம்.
ஈரானுக்கு அருகில், ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில், வைத்து Stena Impero டேங்கர் கப்பலை ஈரான் கடத்தி இருக்கிறது. ஏன் எனக் கேட்டால் Stena Impero கப்பல் சர்வதேச கடல் விதிகளை மீறிவிட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள் ஈரானின் புரட்டசிகர பாதுகாவலர்கள் (Iran Revolutionary Gauards).

ஆனால் Stena Impero கப்பலின் உரிமையாளர்கள் கப்பல் சர்வதேச வதிமுறைகள் படி தான் இருக்கிறது என்றும், கடத்தப்படுவதற்கு முன் வரை சர்வதேச கடல் பகுதிகளிலும் தான் தங்கள் Stena Impero பயணித்துக் கொண்டிருந்தது என்றும் அழுத்தமாக தங்கள் மறுப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.
பிரிட்டன் நாட்டின் எம் வி மெஸ்டர் (M V Mesdar) என்கிற கப்பலையும் ஆயுதம் ஏந்திய ஈரானிய புரட்சிப் படை பாதுகாவலர்கள் கடத்தி இருக்கிறார்கள் ஆனால் அந்த கப்பலை விரைவில் விடுவித்துவிட்டார்களாம். Stena Impero கப்பலின் உரிமையாளர்கள், தங்கள் கப்பலைத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தற்போது கைவிரித்திருக்கிறார்களாம். ஆனால் ஹொர்முஸ் ஜலசந்தி பகுதியில் தான் தங்கள் Stena Impero கடத்தப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்கிறார்கள்.
இங்கிலாந்து வெளியுறவுத் துறை செயலர் ஜெர்மி ஹண்ட் "உடனடியாக இந்த பிரச்னை ஒரு முடிவுக்கு காணவில்லை என்றால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். இங்கிலாந்து ராணுவ நடவடிக்கைகள் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண விரும்பவில்லை. மாறாக பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறது" எனச் சொல்லி இருக்கிறார். Stena Impero கப்பலை நான்கு கப்பல்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் சூழ ஈரான் கடல் பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி இருக்கிறார் இங்கிலாந்தின் வெளியுறவுத் துறைச் செயலர் ஜெர்மி ஹண்ட்.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

இந்த ஏரியாவுல எந்த கப்பல் நுழைஞ்சாலும் தட்டி தூக்குவோம்!! ஈரான் மிரட்டலால் ஸ்தம்பித்த உலக நாடுகள்!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

கத்தார் வாழ் இந்தியர்களே கவனம்!! வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!! #Iranwar

துபாய் வாழ் இந்தியர்களுக்கு வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி பதிவு செய்ய சொல்கிறதா இந்திய தூதரகம்? உண்மை என்ன?

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications