எப்போதும் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸெக்ஸின் நிறுவனம் மற்றும் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், எனது வேலையை விட்டு விட்டு முழு நேர செல்வாக்கு மிக்கவராக மாற வேண்டும் என நினைக்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
ட்விட்டரில் எப்போதும் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்ளும் எலான் மஸ்க், எனது வேலையை விட்டு விட்டு முழு நேர செல்வாக்கு மிக்கவராக மாற வேண்டும் என நினைக்கிறேன், இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீங்க? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இது குறித்து பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.. ,மேலும் பலரும் மஸ்கின் இந்த ட்வீட்டினை ரீட்வீட் செய்தும், காமாண்ட் செய்தும் வருகின்றனர்.
எலான் மஸ்கின் யூடியூப் சேனல்
ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்கினை டேக் செய்து, ஒருவர் நீங்கள் ஏன் ஒரு யூடியூப் சேனலை தொடங்க கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக மஸ்கும் தனது சேனலின் பெயரும் நூப்டூப் (Noobtoob) என பதிலளித்துள்ளார். இதே மற்றொரு பயனர் தான் எலான் மஸ்கிற்கு பயிற்சி அளிக்க வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
WazirX CEO கருத்து
WazirX நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான நிஷால் ஷெட்டி, மின்சார கார் வாகன நிறுவனம், ராக்கெட் நிறுவனம், போரிங் நிறுவனம் என ஏற்கனவே நீங்கள் செல்வாக்கு மிக்கவராக மாற, நீங்கள் எடுத்த முயற்சிகள் மிக அதிகம் என பதிவிட்டுள்ளார்.
புதிய திட்டன் என்ன?
நிஷால் ஷெட்டி கூறியது போல பல துறைகளில் வெற்றிகரமான செல்வாக்கு மிக்கரவாக வலம் வந்து கொண்டு இருக்கும் எலான் மஸ்க், தற்போது புதிய அதிரடியான திட்டத்தினையும் கையில் எடுத்துள்ளார். அது நியூராலிங்க் என்ற திட்டம் தான். இது குறித்த ஆய்வில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூராலிங்க் என்றால் என்ன?
இது மனித மூளைகளில் சிப்களை பொருத்தி, அதன் மூலம் நாம் நினைக்கும் வேலைகளை விரைவில் முடிக்க வைப்பது. இது கிட்டதட்ட ரோபோ போல இருக்குமோ? என்ற பல கேள்விகளுக்கு மத்தியில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்தால் தான் முழுமையாக தெரியும். எனினும் மூளையில் பொருத்தப்படும் இந்த சிப் மூலம், நியூரான்களில் இருந்து தகவல்களை கணினிக்கு இந்த சிப் தகவல் அனுப்பும்.
இது சாத்தியமா?
இதன் மூலம் நாம் என்ன செய்ய நினைக்கிறோமோ? அதனை விரைவில் செயல்படுத்த முடியும் என கூறப்படுகின்றது. எனினும் இது சாத்தியமானதா? இது வேறு எந்த வகையில் எல்லாம் பயன்படுத்த முடியும், நடைமுறைக்கு சாத்தியமான விஷயமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.