அமெரிக்காவின் முன்னணி வாகன நிறுவனமாம்ன டெஸ்லா இன்க் இந்திய சந்தையில் நுழைவதற்கு முன்பாகவே, இந்தியாவின் மூன்று வாகன உதிரி பாகங்கள் சப்ளையர்களோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், டெஸ்லா ,உதிரி பாகங்கள் சப்ளையர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இது முக்கிய மின்னணு உதிரி பாகங்கள் மற்றும் இயந்திர பாகங்கள் என பலவற்றிற்கும் நாடுவதாக தெரிகிறது. குறிப்பாக பேனல்கள், கண்ணாடிகள், பிரேக்குகள், கியர்கள் மற்றும் பவர் சீட்ஸ் உள்ளிட்ட பல உதிரி பாகங்களுக்கும் சப்ளை செய்ய பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிகின்றது.
டெஸ்லாவுக்கு சப்ளையர்ஸ்
ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்திற்கும் சோனா காம்ஸ்டார் லிமிடெட், சந்தர் டெக்னாலஜிஸ் லிமிடெட் மற்றும் பாரத் ஃபோர்ஜ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் உதிரி பாகங்களை சப்ளை செய்து வருகின்றன. இந்த நிலையில் சந்தையில் நுழையும் முன்பே அதற்காக டெஸ்லா நிறுவனம் ஆயத்தமாகி வருகின்றது.
வரி குறைப்பு இருக்குமா?
கடந்த ஜூலை மாதம் எலான் மஸ்க், டெஸ்லா தனது கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்தால், அதன் பிறகு உற்பத்தியினை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் வரி குறைப்புக்காக அரசினை நாடியுள்ளது. இதற்கு தற்போது வரையில் அரசு தரப்பில் இருந்து எந்த சாதகமான பதிலும் வந்ததாக தெரியவில்லை.
வரியை குறைக்க வேண்டும்
சமீபத்தில் டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. மேலும் இவ்வாறு வரியை குறைப்பதன் மூலம், இதன் மூலம் இந்தியாவில் மின்சார வாகன வணிகம் அதிகரிக்கும். இதனால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என டெஸ்லா தரப்பில் கூறப்பட்டது.
டெஸ்லாவின் அடுத்த திட்டம்
நடப்பு ஆண்டில் இந்தியாவில் தனது விற்பனையை தொடங்கவுள்ளதாக கூறியிருந்த எலான் மஸ்க், டெஸ்லா நிறுவன கார்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், அரசு வரியை குறைக்குமா? டெஸ்லா இங்கு உற்பத்தியினை தொடங்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் அரசு தரப்பில் வரியை குறைக்க முடியாது என்று கூறியிருந்த நிலையில், டெஸ்லாவின் அடுத்த திட்டம் தான் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிலும் எதற்காக சப்ளையர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது என பல கேள்விகள் எழுந்துள்ளன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications