சீனாவின் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அப்படி என்ன பாசமோ தெரியவில்லை. ஏனெனில் எது எடுத்தாலும் பிரச்சனையாகவே அமைந்து வருகிறது.
Recommended Video
ஆரம்பத்தில் சீனாவின் பிரபலமான வீடியோ செயலியான டிக் டாக்கினை இந்தியா நாட்டின் பாதுகாப்பு கருதி தடை செய்தது.
முதன் முதலாக இந்தியா தடை செய்திருந்தாலும் கூட, இதன் பின்னர் தடை செய்ய போவதாக அமெரிக்கா அறிவித்தது.
டிக் டாக் செயலிக்கு தடை
பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டாக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதனால் அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க டிரம்ப் முடிவு செய்ததாக கூறப்பட்டது.
மீண்டும் புதிய உத்தரவு
அதன்படி அவர் தொடர்ந்து டிக் டாக் நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த வாரம் அமெரிக்காவில் டிக் டாக் செயலியின் பரிவர்த்தனைக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் Donald Trump கையெழுத்திட்டார். இந்த நிலையில் தான் தற்போது அவர் டிக்-டாக் நிறுவனத்துக்கு எதிராக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
90 நாட்கள் கெடு
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டுக்கான குழுவின் நிபந்தனைகளின் பேரில் பைட்டான்ஸ், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் சீன பங்குதாரர்கள் அமெரிக்காவில் செய்துள்ள முதலீடுகள் உள்ளிட்ட அசையா சொத்துகள் மற்றும் அனைத்து வகையான அசையும் சொத்துகள் என எல்லாவற்றையும் 90 நாட்களுக்குள் விலக்கிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை நாட திட்டம்
அமெரிக்காவில் தடை செய்யப்போவதாக கூறப்பட்டு வரும் டிக்டாக் நிறுவனம், அமெரிக்கா டொனால்டு டிரம்பிற்கு எதிராக நீதிமன்றத்தினை நாட முடிவு செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் எந்த நீதிமன்றத்தினை நாட உள்ளது என கூறப்படவில்லை. ஏறக்குறைய வருடத்திற்கு மேலாக அமெரிக்காவின் கவலைகளை தீர்க்க முயற்சித்து வருவதாக டிக் டாக் தரப்பில் கூறப்படுகிறது.
டிக்டாக்கினை வாங்க ஆர்வம்
அசாதாரண மற்றும் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், 1977 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ், ஒரு உத்தரவினை பிறப்பித்தார். இது பரிவர்த்தனைகளைத் தடுக்கவும், சொத்துக்களைக் கைப்பற்றவும் அனுமதித்தது. இதற்கிடையில் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வணிகத்தினை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் மட்டும் அல்ல, ஆரக்கிள் மற்றும் டிவிட்டர் நிறுவனமும் ஆர்வம் தெரிவித்துள்ளன.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை
டிக்டாக் நிறுவனம் சீன அரசால் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அது பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன அரசுடன் பகிர்ந்து கொள்வதாகவும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, அந்த நிறுவனம் மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் நீதிமன்றத்தினை நாட போவதாக டிக் டாக் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.