உலக நாடுகள் பலவும் இன்று மெதுவான வளர்ச்சிக்கு மத்தியில் பல சவாலான நிலையை எதிர்கொண்டு வருகின்றன. பல நாடுகளும் அண்டை நாடுகளை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இப்படி எதிர்பார்க்கும் நாடுகள் பல வகையிலும் கடன் திரட்டுவது உண்டு. உதாரணத்திற்கு கடன் பத்திரங்கள், பங்குகள், தனியார்மயம், வெளிநாட்டு கடன் என பல வகையிலும் வாங்குகின்றன.
குறிப்பாக கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் பெரியளவில் கடனை திரட்டுகின்றன. அப்படி அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட கடன் பத்திரங்களை அதிகம் வாங்கியுள்ள நாடுகள் எது தெரியுமா? எவ்வளவு வாங்கியிருக்கிறார்கள் தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்.
ஜப்பான் தான் டாப்
அமெரிக்காவின் கடன் பத்திரங்களை அதிகம் பெற்றுள்ள 5 நாடுகளை பற்றி காணலாம்.
அமெரிக்காவிடம் அதிக கடன் பத்திரங்களை பெற்றுள்ள 5 நாடுகளில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. தன்னுடைய மொத்த ஹோல்டிங்கில் 17.01% அமெரிக்காவிடம் வைத்துள்ளது. இதன் மதிப்பு 1212.8 பில்லியன் டாலர் ஆகும். ஜப்பான் அதன் ஜிடிபியில் அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் முதலிடத்தில் இருந்தாலும், முதலீட்டிலும் முதலிடத்தில் தான் உள்ளது.
சீனா
அமெரிக்கா சீனா இடையேயான பிரச்சனைகள் பதற்றங்கள் பலவும் இருந்தாலும், அமெரிக்காவின் மொத்த கடன் பத்திர முதலீட்டில் 13.76% சீனாவிடம் உள்ளது. இதன் மதிப்பு 980.8 பில்லியன் டாலர்களாகும். கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து தனது பொருளாதாரத்தினை சீனா விரிவுப்படுத்த முயன்று வரும் ஒரு நாடாக இருக்கிறது. அதன் பின்னணியில் இப்படியும் ஒரு முதலீட்டினை, அதனையும் அமெரிக்காவில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது இங்கிலாந்து ஆகும். இங்கிலாந்தின் மொத்த கடன் பத்திர இருப்பில் 8.89% அமெரிக்காவிடம் உள்ளது. இதன் மதிப்பு 634 பில்லியன் டாலராகும். இன்று பணவீக்க பிரச்சனையால் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு வரும் இங்கிலாந்து, முதலீட்டிலும் கவனம் செலுத்தியுள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து வசம் 4.13% அமெரிக்க கடன் பத்திரங்கள் உள்ளன. இதன் மதிப்பு 294.1 பில்லியன் டாலராகும். பொதுவாக மற்ற அண்டை நாடுகளும் அண்டை நாட்டு பணக்காரர்களும் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்வது வழக்கம். ஆனால் சுவிட்சர்லாந்தே அமெரிக்காவிடம் இத்தகைய முதலீடினை செய்துள்ளது குறிப்பிடத்தகக்கது.
கெய்மன் தீவுகள்
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது கெய்மன் தீவு ஆகும். கெய்மன் தீவிடம் 4.11% பங்கு கடன் பத்திரங்கள் அமெரிக்காவில் உள்ளது. இதன் வசம் உள்ள அமெரிக்க கடன் பத்திரத்தின் மதிப்பு 293.2 பில்லியன் டாலராகும். இதில் துரதிஷ்டவசமான கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த பட்டியலில் இந்தியா இல்லை என்பது தான்.
இந்த நாடுகள் ஒரு சேர விற்பனை செய்ய நினைத்தால் அது அமெரிக்காவுக்கு பிரச்சனை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications