அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் வெளிநாட்டு மக்களிடம் இருக்கும் வேலைவாய்ப்புகளை அமெரிக்கக் குடிமக்களுக்குப் பெற்றுத் தருவதில் குறியாக இருக்கிறார். இதனால் அமெரிக்க மக்களுக்கு நன்மை என்றாலும் இதில் அதிகம் பாதிக்கப்பட உள்ளது இந்தியர்கள் தான்.
சமீபத்தில் கூடக் கிரீன் கார்டு விண்ணப்பம் ஒப்புதல் பெறாத ஹெச்1பி விசா விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்பட்டும் கால நீட்டிப்பை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரச்சனை
இப்புதிய அறிவிப்பு இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை, ஆனால் இதன் பாதிப்பு மிகப்பெரியதாக இருக்கும் என அனைவராலும் கணிக்க முடிந்த நிலையில், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது.
கால நீட்டிப்பு ரத்து செய்யப்பட்டால், அமெரிக்க அரசு பல்வேறு தரப்பிடம் இருந்து வழக்கை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
டிரம்ப் அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இந்திய ஐடி நிறுவனங்களை மட்டும் அல்லமல்ல அமெரிக்காவின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களான கூகிள், ஐபிஎம் போன்றவையும் அதிகளவிலான பாதிப்பை சந்திக்கும் எனத் தெரிகிறது. இந்த நிறுவனமும் அதிகளவிலான ஊழியர்களை ஹெச்1பி விசா வாயிலாக ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.
கிரீன் கார்டு
தற்போது அமெரிக்கக் குடியுரிமையான கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்தவர்களில் பெரும்பாலும் 10 வருடத்திற்கு அதிகமான காலத்திற்குக் காத்திகிடக்கின்றனர். மேலும் இதில் அதிகமானோர் அமெரிக்க நிறுவனங்களில் நடுநிலை மற்றும் உயர் அதிகாரிகளாக உள்ளனர்.
வழக்கு
அமெரிக்க நிறுவனங்களில் முக்கியமான பதவிகளில் இருக்கும் வெளிநாட்டவர்களை இழக்கும்பட்சத்தில், அவர்களின் வர்த்தகம் அதிகப்படியாகப் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும். இத்தகைய சூழ்நிலையில் வெளிநாட்டவர்களும், வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருக்கும் நிறுவனங்கள் அமெரிக்க அரசின் மீது வழக்குத் தொடுக்கவும் முடியும்.
தற்காலிக நிறுத்தம்..
மேலும் அமெரிக்காவின் ஹோம்லேண்டு செக்யூரிட்டி துறை கிரீன் கார்டுக்காக விண்ணப்பம் செய்வதர்களுக்கான ஹெச்1பி கால நீட்டிப்புத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்துள்ளது
5 லட்சம் ஊழியர்கள்
இப்புதிய அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் சுமார் 5 லட்சம் பேர் தாய்நாட்டிற்குத் திரும்பும் நிலை ஏற்படும்.