அமெரிக்கா அதிபராக பதவி ஏற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச இறக்குமதி வரியை விதித்து வருகிறார் . இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முன்பு இருந்தது விட அதிகமான இறக்குமதி வரி வசூல் செய்யப்படுகிறது .
இந்தியாவைப் பொறுத்தவரை முதலில் 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தார். பின்னர் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தண்டனையாக கூடுதலாக 25% என தற்போது இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது . டிரம்ப் இதே பாணியை பின்பற்றி பல நாடுகளின் பொருட்களுக்கு வரியை அதிகரித்தார். இறக்குமதி வரியை அதிகரித்தால் வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதி குறைந்து உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும், இந்த வரி விதிப்புக்கு அஞ்சி பல நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் என்பதே டிரம்பின் திட்டம்.

இறக்குமதி வரி உயர்வால் இந்தியாவில் ஜவுளி, தோல் பொருட்கள் என பல்வேறு உற்பத்தி துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் டிரம்ப் பல மாதங்களாகவே இந்த இறக்குமதி வரி அதிகரிப்பின் மூலம் அரசுக்கு கிடைத்திருக்கக்கூடிய வருவாயை அமெரிக்கர்களுக்கு பகிர்ந்து அளிக்க போகிறேன் என தொடர்ச்சியாக கூறிவந்தார். தற்போது அதனை அறிக்கையாக வெளியிட்டு உறுதிப்படுத்தி இருக்கிறார்.
தன்னுடைய ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் அவர் இறக்குமதி வரிகளுக்கு எதிரானவர்கள் முட்டாள்கள் என தெரிவித்திருக்கிறார். அமெரிக்க குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 2000 அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 1,77,279 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் "இறக்குமதி வரிகளுக்கு எதிரானவர்கள் முட்டாள்கள் , நாம் தற்போது உலகிலேயே பணக்கார நாடாக இருக்கிறோம், மதிப்புக்குரிய நாடாக இருக்கிறோம். அதிலும் கிட்டத்தட்ட பணவீக்கமே இல்லாமல் பெருமளவில் பங்குச்சந்தை மதிப்பீடு கொண்ட நாடாக செயல்படுகிறோம். நம் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 2000 டாலர் வழங்கப்படும் இது அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறுபவர்களுக்கு கிடைக்காது என தெரிவித்திருக்கிறார் .
மேலும் டிரம்ப் இறக்குமதி வரி உயர்வால் நமக்கு வருமானம் பெருகியுள்ளது, இதனை கொண்டு நம்முடைய கடன்களை அடைப்போன் என்றும் , அமெரிக்காவில் பெருமளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன, எங்கு பார்த்தாலும் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன என கூறியிருக்கிறார்.
இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்கர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தற்போது இந்த 2000 டாலர்கள் எப்படி அமெரிக்கர்களுக்கு வரவு வைக்கப்படும் என்பது குறித்து விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் 2000 டாலர்கள் என்பது வரி குறைப்பு உள்ளிட்ட வடிவங்களில் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications