அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜூலை 2, 2025 அன்று வியட்நாமுடன் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்தார். இந்த ஒப்பந்தம் டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியை விதித்த பின்பு செய்யப்பட்ட 3வது நாடு. டிரம்ப் வியட்நாம் நாட்டின் மீது 46 சதவீதம் ரெசிப்ரோக்கல் வரியை விதித்திருந்தார், இந்த வரி விதிப்பில் இருந்து தப்பிக்க எதையும் செய்ய தாயராக இருப்பதாக வியட்நாம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அமெரிக்க அரசு இதை சரியாக பயன்படுத்தியுள்ளது.
வியட்நாமுடனான ஒப்பந்தத்தின் படி, வியட்நாமில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% வரி விதிக்கப்படும், இது ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட 46% வரியிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைப்பு, வியட்நாம் - அமெரிக்காவுக்கு மத்தியிலான மிகப்பெரிய வர்த்தக உபரியை (trade surplus) கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ளது.

மறுபுறம், அமெரிக்காவிலிருந்து வியட்நாமிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு எந்த வரியும் விதிக்கப்படாது, இதோடு வியட்நாமின் சந்தையை அமெரிக்க நிறுவனங்களுக்கு முழுமையாக திறந்துவிடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் வியட்நாம் நாட்டில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய முடியும்.
மேலும், வியட்நாமில் இருந்து மற்ற நாடுகளின் பொருட்கள் (குறிப்பாக சீனாவிலிருந்து) அனுப்பப்படும் "டிரான்ஸ்ஷிப்பிங்" (transshipping) முறைக்கு 40% வரி விதிக்கப்படும், இது வர்த்தக முறைகேடுகளை தடுக்க உதவும்.
இந்த ஒப்பந்தம், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமுடன் ட்ரம்பின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உருவானது. ட்ரம்ப், தனது Truth Social தளத்தில், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
அமெரிக்காவின் ரெசிப்ரோக்கல் வரி அறிவிப்பிற்குப் பிறகு, வியட்நாமுடன் மட்டுமல்லாமல், பிரிட்டன் மற்றும் சீனாவுடனும் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரிட்டன் நாட்டுடன் ஒரு ஆரம்ப ஒப்பந்தம் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது, பிரிட்டன் நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்கள் மற்றும் பிற பொருட்களுக்கு வரிகள் குறைக்கப்பட்டு உள்ளது.
சீனாவுடன், ஏப்ரல் மாத "லிபரேஷன் டே" அறிவிப்பிற்குப் பிறகு விதிக்கப்பட்ட வர்த்தக தடைகளை நீக்குவதற்கு ஒரு ஒப்பந்தம் மே மாதம் 2025-இல் உருவாக்கப்பட்டது. இதில், சீனாவின் அரிய கனிம ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்காவின் சில ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி 145%-இலிருந்து 55% ஆகவும், சீனாவின் அமெரிக்க பொருட்கள் மீதான வரி 125%-இலிருந்து 10% ஆகவும் குறைக்கப்பட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரை, அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஜூலை 9ஆம் தேதி டிரம்ப் அறிவிக்க 90 நாள் வரி விதிப்பு ஒத்திவைப்பிற்கான கால அவகாசம் முடிவடைகிறது. இந்தியாவிற்கு தற்போது 26% பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது, இது சீனாவின் 54% மற்றும் வியட்நாமின் 46% வரிகளை விட குறைவு.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications