உலகின் முன்னணி மைக்ரோ பிளாகிங் சேவை அளிக்கும் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஜாக் ரோர்சி உரிமைக்காகப் போராடும் முன்னணி அமைப்பிற்கு 1.5 மில்லியன் டாலர் நிதியுதவி செய்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் 8 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அமெரிக்காவில் நுழையத் தடை விதித்தார் அதனை எதிர்த்துப் போராடும் அமெரிக்கன் சிவில் லிபெர்டிஸ் யூனியன் அமைப்பிற்கு டிவிட்டர் சீஇஓ ஜேக் டோர்சி உட்பட இந்நிறுவனத்தின் 1,000 ஊழியர்கள் சேர்ந்து சுமார் 1.5 பில்லியன் டாலர் நிதியுதவி செய்துள்ளனர்.
இந்த நிதியுதவி குறித்து டிவிட்டர் நிறுவனமும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமெரிக்கன் சிவில் லிபெர்டிஸ் யூனியன் அமைப்பு கடந்த சில நாட்களில் சுமார் 24 மில்லியன் டாலர் நிதியை நன்கொடையாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான மைக்ரோசாப்ட், டொனால்டு டிரம்பை குடியுரிமை விதிகளைத் தளர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
டிரம்பின் அறிவிப்புகளுக்குக் கூகிள் நிறுவனம் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கான வீடியோ-ஐ கீழே பாருங்கள்..!