துபாய்: ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டவர்கள் செய்து வரும் வணிகங்களில் 100 சதவீதம் வரை முதலீட்டை அதிகரிக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அரசின் இந்த முடிவால் துபாயில் வர்த்தகம் செய்து வரும் வெளிநாட்டவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
100 சதவீத வெளிநாட்டு முதலாளிகள் அனுமதிப்பதால் முதலீடுகள் அதிகரிக்கும், கடந்த ஓர் ஆண்டாக உள்ள வேலை வாய்ப்பின்மை பிரச்சனை குறையும் என்றும் அமீரக அரசு எதிர்பார்க்கிறது.
வரைவு அறிக்கை
ஐக்கிய அரபு அமீரகப் பிரதமரான ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்மூம் தலைமையிலான அமைச்சக கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கையைத் தயாரித்துச் சமர்ப்பிக்குமாறும் பொருளாதாரத் துறை அமைச்சருக்கு இவர் உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைய நிலை
இப்போது ஐக்கிய அரபு அமீரகம், துபாய் உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டவர்களால் 49 சதவீதத்திற்கும் அதிகமாகப் பங்குகளை எந்தஒரு வணிகங்களிலும் வைத்துக்கொள்ள முடியாது. தற்போது அதில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது.
எப்போது சட்டம் இயற்றப்படும்
இந்த 100 சதவீத வெளிநாட்டு முதலாளிகளுக்கான அனுமதி சட்டம் 2018-ம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர்.
விசா
முதலீட்டாளர்கள், அறிவியல் வல்லுநர்கள், தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் உள்ளவர்களுக்கு 10 வருடங்களுக்கு வசிப்பிட விசாக்கள் அளிப்பதன் ஒரு கட்டமாக இந்த முடிவினையும் ஐக்கிய அரபு அமீரக அரசு எடுத்துள்ளது.