லண்டன்: பிரிட்டனில் நிலவும் 4.5 பில்லியன் பவுண்டு நிதிநெருக்கடியை சமாளிக்க இந்நாட்டின் புதிய அரசு ராயல் மெயில் நிறுவனத்தில் வைத்திருந்த 30 சதவீத பங்குகளை 1.5 பவுண்டுக்கு விற்றுள்ளது.
இதன் மூலம் இந்நிறுவனம் முழுமையான தனியார் நிறுவனமாக மாறியுள்ளது. ராயல் மெயில் நிறுவனம் பிரிட்டனில் 1516ஆம் ஆண்டு முதல் தபால் சேவை அளித்து வருகிறது.
டேவிட் கேமெரூன்
கடந்த மே மாதம் 7ஆம் தேதி பிரிட்டனில் நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் 330 இடங்களில் வெற்றிக் கனியை பறித்த மீண்டும் டேவிட் கேமெரூன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பங்கு விற்பனை
இதுகுறித்துப் பங்கு விற்பனையில் ஈடுப்பட்டுள்ள அமைப்பின் தலைவர் ஜார்ஜ் ஆஸ்பார்ன் கூறுகையில், "இன்று பிரிட்டன் அரசு ராய்ல் மெயில் நிறுவனத்தில் மீதமுள்ள 30 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளது" என அதிகராப்பூர்வமாகத் தெரிவித்தார்.
அக்டோபர் 2013
இந்நிறுவனம் பிரிட்டனின் மிகவும் பழமைவாய்ந்த நிறுவனமாகும், அக்டோபர் 2013 ஆம் ஆண்டு வரை இந்நிறுவன அரசு கட்டுப்பாட்டில் இருந்தது. இதன் பின் நாட்டின் பல்வேறு நிதி நிலை காரணங்களால் அரசிடம் இருந்த பங்கு இருப்பு தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
30 சதவீத பங்குகள்
அரசிடம் இருந்த 30 சதவீத பங்குகள் விற்பனை செய்ததன் மூலம் இந்நிறுவனம் இனி அதன் உரிமை நிறுவனமான ராயல் மெயில் குரூப் நிறுவனத்திடமே செல்கிறது.