ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பின் உலகளவில் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளது குறிப்பாகக் கச்சா எண்ணெய், எரிவாயு போன்றவற்றில் அதிகப்படியான பாதிப்பு மூலம் உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் பணவீக்கமும் மோசமான நிலையில் உள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் வர்த்தகத்தை முடக்க வேண்டும் என்ற காரணமாகவும் உணவை ஆயுதமாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ள ரஷ்யா, இதன் மூலம் முக்கியமான கப்பல் வர்த்தகத்திற்குச் செய்த ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளது.
இதனால் உலக நாடுகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட உள்ளது, ரஷ்யாவுக்குத் தற்போது என்ன பிரச்சனை..?
தானிய ஏற்றுமதி
உலகளவில் தானியங்கள் ஏற்றுமதியில் உக்ரைன் முக்கியப் பங்கு வகிப்பது அனைவருக்கும் தெரியும், ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய காலகட்டத்தில் உக்ரைன் நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட போது உலக நாடுகளில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு உருவானது.
இந்தியா
இந்தக் காலகட்டத்தில் தான் இந்தியாவிடம் உலக நாடுகள் உணவு பொருட்கள் குறிப்பாகக் கோதுமைக்கு அதிகப்படியான ஆர்டர்களைக் குவித்தது. குறிப்பாகத் துருக்கி போன்ற பல நாடுகள் இந்தியாவிடம் கோதுமை உட்படப் பல உணவு பொருட்களை வாங்கத் தீர்மானித்தது.
ரஷ்யா - உக்ரைன்
உலகளவில் நிலவும் உணவு பற்றாக்குறை பிரச்சனையைச் சமாளிக்க ஜூலை மாதம் ரஷ்யா - உக்ரைன் மத்தியில் தானியங்களைக் கப்பல் வாயிலாக ஏற்றுமதி செய்யத் துருக்கி மற்றும் ஐநா பஞ்சாயத்துச் செய்து அனுமதி பெற்றது.
டிரோன் அட்டாக்
அதாவது உக்ரைன் நாட்டின் தானியங்களை உலக நாடுகளுக்குக் கப்பல் வாயிலாக ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்தது ஒப்பந்தம் செய்தது, தற்போது கிரிமியா-வில் நடந்த டிரோன் அட்டாக் காரணம் காட்டி இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக முடிவு செய்து ஏற்றுமதியைத் தடை செய்ய முடிவு செய்துள்ளது.
90 லட்சம் டன் ஏற்றுமதி
ஜூலை மாதம் செய்த இந்த ஒப்பந்தம் இதுவரை 90 லட்சம் டன் அளவிலான உக்ரைன் தானியங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உணவு பற்றாக்குறையைத் தீர்த்துள்ளது, நவம்பர் 19 ஆம் தேதி இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும்.
ஒப்பந்தம் முறிவு
ஆனால் சனிக்கிழமை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் இருக்கும் கருங்கடல் படையின் மூலம் செய்யப்பட்ட ட்ரோன் அட்டாக்கிற்கு உக்ரைன் ராணுவம் தான் காரணம் எனக் கூறி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை முதல் உக்ரைன் தானிய ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.
அமெரிக்கா
ரஷ்யா எடுத்துள்ள முடிவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இது முற்றிலும் மூர்க்கத்தனமானது என்று கூறினார், அதேவேளையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ரஷ்யா உணவை ஆயுதமாக்குகிறது என்று கூறினார்.
வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவின் இந்த நடவடிக்கை மூலம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிற்குப் பெரிய அளவிலான பஞ்சத்தை ஏற்படுத்தும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. மேலும் 10க்கும் அதிகமாகக் கப்பல்கள் ஏற்றுமதிக்குத் தயாராகி வருகிறது எனத் தெரிவித்தார்.
உலக நாடுகளுக்குப் பாதிப்பு
ரஷ்யாவின் இந்த முடிவு உக்ரைன் நாட்டை நேரடியாகப் பாதித்தாலும், உலக நாடுகளை மறைமுகமாகப் பெரிய அளவில் பாதிக்கும் குறிப்பாக உணவு பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அனைத்து ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளையும் இது கடுமையாகப் பாதிக்கும்.
இந்தியா
இந்தியாவிலும் இதன் பாதிப்பு எதிரொலிக்கும், உக்ரைன் ஏற்றுமதிகள் நிறுத்தப்பட்டால் உலக நாடுகள் இந்தியாவின் உதவியை நாடும். ஏற்கனவே இந்தியாவில் தானியங்களின் விலை மோசமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி அளவு அதிகமானால் தானியங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விலை அதிகரிக்கும்.
மத்திய அரசு
இதைத் தடுக்க மத்திய அரசு விரைவில் மீண்டும் உணவு பொருட்கள் அல்லது தானியங்களின் ஏற்றுமதி வர்த்தகத்தைக் கண்காணிக்கவும், எந்த நாட்டுக்கு எவ்வளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது, இந்திய மக்களுக்குப் போதுமான இருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்யும் பணிகளைத் துவங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications