நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் காட்டி வந்த நிலையில், அதனை எதிர்த்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. அது இப்போது வரையில் தொடர்ந்து கொண்டுள்ளது.
அதேசமயம் ரஷ்யாவுக்கு எதிராக சிறிதும் தளராமல் உக்ரைன் எதிர்த்து நின்று போராடி வருகின்றது.
பல கட்டங்களாக இவ்விரு நாடுகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில் கூட, அதுவும் சரிவராத நிலையில் மீண்டும் போரானது தொடர்ந்து கொண்டுள்ளது.
சப்ளையை நிறுத்த திட்டம்
இந்த நிலையில் தான் ரஷ்யாவுக்கு மேற்கொண்டு அழுத்தத்தினை கொடுக்கும் விதமாக, ஐரோப்பாவுக்கான கேஸ் அனுப்பும் போக்குவரத்தினை உக்ரைன் நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவுக்கு அனுப்பப்படும் கேஸ் சப்ளையில், மூன்றில் ஒரு பங்கு உக்ரைன் வழியாகவே வழங்கப்படுதாக கூறியுள்ளது.
உக்ரைன் தான் முக்கிய பாதை
உக்ரைனின் இந்த அறிவிப்பினால் அரண்டு போன ரஷ்யா, அதன் சப்ளையை வேறு பகுதிக்கு மாற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியிலும், ஐரோப்பாவிற்கு ரஷ்யா எரிவாயு போக்குவரத்து பாதையாக உக்ரைன் உள்ளது.
ஃபோர்ஸ் மஜ்யூர்
உக்ரைனின் கேஸ் பாதையை இயக்கி வரும் GTSOU, புதன் கிழமை முதல் சோக்ரானிவ்கா பாதை வழியாக ஏற்றுமதியினை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனை ஃபோர்ஸ் மஜ்யூர் என்றும் தெரிவித்துள்ளது. இது ஒரு வணிகமானது அதன் காட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு, எதோவென்றால் பாதிக்கப்படும்போது பயன்படுத்தப்படுகிறது.
பதற்றம் அதிகரிக்கலாமோ?
உக்ரைனின் இந்த நடவடிக்கையினால் உள்நாட்டு சந்தையில் எந்த தாக்கமும் இருக்க கூடாது என்றும், அரசு எரிசக்தி நிறுவனமான நாப்டோகாஸ் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மொத்தத்தில் உக்ரைனின் இந்த நடவடிக்கையினால் ரஷ்யா உக்ரைன் இடையேயான பதற்றம் மேற்கொண்டு அதிகரிக்கலாமோ என்ற பதற்றமான நிலையே இருந்து வருகின்றது.
பிடி கொடுக்காத ரஷ்யா
எனினும் இதற்கெல்லாம் பிடி கொடுக்காமல் ரஷ்யா சப்ளையில் எந்த பிரச்சனையும் இல்லை. ஐரோப்பாவில் கேஸ் வாங்குபவர்களுக்கு தேவையை பூர்த்தி செய்வதாகவும் காஸ்ப்ரோம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்குமா?
அண்டை நாடுகளை ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதை தடை செய்யுமாறு அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றது. இதற்கிடையில் ஏற்கனவே பல நாடுகள் தடை எரிபொருள் இறக்குமதியினை தடை செய்துள்ளன. பல நாடுகளும் தடை செய்ய முயற்சி செய்தும் வருகின்றன. இந்த நிலையில் உக்ரைனின் இந்த தடையானது ரஷ்யாவின் சப்ளையில் தாக்கத்தினை ஏற்படுத்துமோ? இது சர்வதேச அளவில் எரிபொருல் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications