பொய் கூறினாரா டிரம்ப்? – ஈரான் அணுசக்தி நிலையங்கள் உண்மையாகவே அழிக்கப்பட்டதா?

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் உலகிற்கே ஆபத்தை விளைவிக்க கூடியவை எனக் கூறி கடந்த மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தின. குறிப்பாக அமெரிக்கா தன்னுடைய விமானப்படை மூலம் ஈரானுக்கு சொந்தமான மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.

ஃபார்டோ, இஸ்ஃபஹான், நடான்ஸ் ஆகிய ஈரானுக்கு சொந்தமான மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா திடீரென தன்னுடைய விமானப்படை விமானங்களை அனுப்பி தாக்குதல் நடத்தியது. Operation Midnight Hammer என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று நிலையங்களும் பெரிய அளவில் சேதமடைந்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. அமெரிக்க அதிபர் டிரம்பும் இதனை உறுதிப்படுத்தினார். ஆனால் உண்மை வேறு எனக் கூறும் வகையில் ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது.

பொய் கூறினாரா டிரம்ப்? – ஈரான் அணுசக்தி நிலையங்கள் உண்மையாகவே அழிக்கப்பட்டதா?

அமெரிக்காவை சேர்ந்த என்பிசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகள் ஒரு அணுசக்தி நிலையம் மட்டுமே சேதம் அடைந்திருக்கிறது என தெரிவித்திருக்கிறது. மற்ற இரண்டு அணுசக்தி நிலையங்களில் மிக லேசான அளவு சேதங்களே ஏற்பட்டுள்ளன என கூறி இருக்கிறது. அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி விட்டோம், ஈரானால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அணுசக்தி திட்டங்களை செயல்படுத்தவே முடியாது என கூறிவந்த நிலையில் அதற்கு மாறாக இந்த அறிக்கை வெளியாகி இருக்கிறது.

ஃபார்டோ தவிர மற்ற இரண்டு அணுசக்தி நிலையங்களிலும் அடுத்த சில மாதங்களிலேயே ஈரானால் தன்னுடைய அணுசக்தி செயல்பாடுகளை தொடங்க முடியும் என கூறியிருக்கிறது. இந்த செய்தி தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரான கெல்லி அமெரிக்க அதிபர் மற்றும் ராணுவ தலைமையகத்தை சேர்ந்த நிபுணர்கள் கூறியதைப் போலவே ஆபரேஷன் மிட் நைட் ஹேமர் மூலம் ஈரானின் அணுசக்தி திறன்கள் அனைத்துமே முழுவதுமாக அழிக்கப்பட்டன என்பதுதான் உண்மை என தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா ராணுவ தலைமையகமான பெண்டகன் செய்தி தொடர்பாளரான ஸீன் ஃபார் ஈரானுக்கு சொந்தமான மூன்று அணுசக்தி நிலையங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன என்பது தான் உண்மை அதில் எந்த சந்தேகமும் இல்லை எனக் கூறியிருக்கிறார்.

முன்னதாக இந்த தாக்குதல் நடந்த ஒரு சில நாட்களிலேயே ஈரான் தன் வசம் வைத்திருந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது. தாக்குதல் நடந்த இடங்களில் அணுசக்தி அல்லது கதிர்வீச்ச வெளியான எந்த ஒரு அடையாளமும் இல்லை என்பதால் ஈரான் முன்கூட்டியே இந்த யுரேனியத்தை பாதுகாத்து வைத்து விட்டதா அல்லது அமெரிக்கா நடத்திய தாக்குதல் அதனை அழிக்கும் வகையில் போதுமானதாக இல்லாமல் இருந்ததா என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில் தான் இப்படி ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+