ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி இருப்பது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா குரல் கொடுத்து வந்தது. இந்த சூழலில் திடீரென அமெரிக்க படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றன. இது பெரிய போருக்கு வித்திடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுக்கு சொந்தமான நடான்ஸ் ,ஃபோர்டோ மற்றும் இர்ஃபஹான் (Natanz, Fordo and Isfahan ) ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இதனை பதிவு செய்திருக்கிறார். ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீதான எங்களின் தாக்குதலை நாங்கள் வெற்றிகரமாக முடித்து விட்டோம் என பதிவிட்டு இருக்கும் அவர், எங்களுடைய அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான் வெளியை விட்டு வெளியேறிவிட்டன என தெரிவித்திருக்கிறார். உலகில் வேறு எந்த ஒரு ராணுவத்தாலும் இதனை செய்திருக்க முடியாது எனக் கூறியிருக்கும் அவர் ஈரான் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும் இது அமைதிக்கான நேரம் என குறிப்பிட்டு இருக்கிறார்.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது மேற்கத்திய நாடுகளுக்கு எப்போதுமே கவலை உண்டு. ஈரான் அணு ஆயுதங்களை மேம்படுத்தி வருவதாக அமெரிக்கா தொடர்ந்து சாடி வருகிறது. இந்நிலையில் ஈரான் அணுசக்தி திட்டங்களை குறி வைத்து இஸ்ரேல் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியது. இருவருக்கும் இடையிலான இந்த மோதலில் அமெரிக்கா தற்போது களமிறங்கி இருப்பது உலக அரசியலில் பெரும் பதற்றத்தையும் உண்டாக்கி இருக்கிறது.
முன்னதாக இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர் என அமெரிக்கா அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஈரான் தன்னுடைய அணுசக்தி நிலையங்களை மிகவும் ரகசியமான இடத்தில் வைத்திருந்த நிலையில் துல்லியமாக அதன் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் மீதான இந்த தாக்குதலை அடுத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இது மிகச் சிறந்த ஒரு ராணுவ தாக்குதல் என குறிப்பிட்டிருந்தார். ஈரானின் முக்கியமான யுரேனியம் செறிவூட்டல் தளங்கள் முற்றிலுமாக அளிக்கப்பட்டன என அவர் அறிவித்திருக்கிறார். இதற்கிடையே ஈரானும் தங்களின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. இது தொடர்பாக ஈரான் நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஈரானுக்கு ஆதரவாக இருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதன் பின்விளைவுகளை கடுமையாக எதிர்கொள்ளப் போகிறார் என எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் தற்போது அமைதி உடன்படிக்கைக்கு முன்வர வேண்டும் இல்லை என்றால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் அந்த தாக்குதல் மிக கடுமையானதாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது இப்படியே தொடர வேண்டாம் என்பதே என்னுடைய விருப்பம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
கடந்த எட்டு நாட்களில் இல்லாத அளவிலான பெரிய தாக்குதலையும் பெரிய பாதிப்பையும் ஈரான் சந்திக்க நேரிடும் எனவே அவர்கள் அமைதி உடன்படிக்கைக்கு வருவது நல்லது என தெரிவித்திருக்கிறார். அமெரிக்க ராணுவம் மேலும் சில இலக்குகளை ஈரானில் குறித்து வைத்திருப்பதாகவும் நாங்கள் நினைத்தால் சில நிமிடங்களில் அந்த இலக்குகளை அழிப்போம் என்றும் கூறியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளின் கொடூரமான நாடு ஈரான் என கடுமையான வார்த்தைகளால் சாடி இருக்கும் டொனால்ட் டிரம்ப், எங்கள் நோக்கம் ஈரான் அணு ஆயுதங்களை மேம்படுத்துவதை தடுப்பதுதான் என மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இதனிடையே ஈரானின் தலைமை மத குருவும் தலைவருமான அயதுல்லா கமேனி தான் கொல்லப்படலாம் என்ற அச்சத்தில் தனக்கு பிறகு யார் தலைமை குருவாக இருக்கலாம் என்பதை பரிந்துரைத்து விட்டு , பதுங்கு குழிகளில் சென்று தஞ்சம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
More From GoodReturns

தீவிரமடையும் சிலிண்டர் தட்டுப்பாடு: அவசர ஆலோசனை நடத்திய மோடி.. கமிட்டி அமைத்த மத்திய அரசு..!!

ஈரான் போர்: வான்வெளியில் மட்டுமல்ல நீருக்கடியிலும் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா!!

இந்த ஏரியாவுல எந்த கப்பல் நுழைஞ்சாலும் தட்டி தூக்குவோம்!! ஈரான் மிரட்டலால் ஸ்தம்பித்த உலக நாடுகள்!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

கத்தார் வாழ் இந்தியர்களே கவனம்!! வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!! #Iranwar

துபாயில் இருக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஏர்போர்ட் புறப்படும் முன் இதை செய்ய வேண்டும்!!



Click it and Unblock the Notifications