அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் நிதிநிலை அளவு வரலாற்றிலேயே முதல் முறையாக 8 டிரில்லியன் டாலர் அளவீட்டை அடைந்துள்ளது எனப் பெடரல் ரிசர்வ் தனது சொத்து விபரங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2020 மார்ச் மாதம் கொரோனா உச்சத்தைத் தொட்ட காலகட்டத்தில் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தனது நிதிநிலையை மேம்படுத்தும் விதமாக அதிகளவிலான சொத்துக்களை வாங்கிக் குவித்தது. இதன் வாயிலாகக் கடந்த 1.5 வருடத்தில் மொத்த சொத்து மதிப்பின் அளவு இரட்டிப்பு வளர்ச்சியை அடைந்துள்ளது.

திங்கட்கிழமை முதல் சுமார் 160 மில்லியன் டாலர் அளவிலான கார்பரேட் டெபிட் ஹோல்டிங்க்ஸ்-ஐ விற்பனை செய்துள்ளது அமெரிக்கப் பெடரல் ரிசர்வ், மேலும் இவ்வங்கியிடம் சுமார் 14 பில்லியன் டாலர் அலவிலான கார்பரேட் கிரெடிட் போர்ட்போலியோ உள்ளது. இதைச் சரி செய்ய 16 பாண்ட் எக்ஸ்சேஞ்ச் வர்த்தகப் பண்டுகளை விற்பனை செய்யும் பணிகளைத் துவங்கியுள்ளது.
ஒரு நாட்டின் நிதிநிலை தடுமாறும் போது அதைச் சரி செய்யும் மிகப்பெரிய பணியை மத்திய வங்கிகள் செய்யும். இதன் படி கொரோனா தொற்றுக் காலத்தில் அதிகளவிலான முதலீட்டில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளது.
இதன் மூலம் பெடரல் ரிசர்வ்-ன் நிதிநிலை மேம்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் நாட்டின் நிதிநிலை வர்த்தகச் சந்தையைச் சரிவில் இருந்து காப்பாற்றப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications