அமெரிக்க அரசு ஜனவரி 31 ஆம் தேதி சனிக்கிழமை அரசு சேவைகளில் ஒரு பகுதியை முடக்கும் நிலைக்கு (partial shutdown) சென்றது. நாடாளுமன்றத்தில் டிரம்ப் அரசின் நிதி ஒதுக்கீடு கோரிக்கையை ஒப்புதல் பெற முடியாத காரணத்தாலும், இதற்கான காலக்கெடு கடந்துவிட்ட நிலையிலும் அமெரிக்க அரசு ஷட்டவுன் நிலைக்கு சென்றுள்ளது.
அமெரிக்க செனட் அங்கீகரித்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் அடுத்த வாரம் அங்கீகரிக்க உள்ளதால், இந்த முடக்கம் சில நாட்களுக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை அரசு சேவைகளில் சிறு இடையூறு ஏற்படலாம் என தெரிகிறது.

இந்த முடக்கத்திற்கு முக்கிய காரணம் டெமாக்ரடிக் கட்சியின் நிலைப்பாடு. மின்னசோட்டாவின் மின்னியாப்பொலிஸில் இரு போராட்டக்காரர்களை ஃபெடரல் குடியேற்ற அதிகாரிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையை பாதித்தது. இதனால் உள்நாட்டு பாதுகாப்புத் துறைக்கு (DHS) புதிய நிதி ஒதுக்கீட்டை தடுத்தது.
தற்போது நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் அரசு செயல்பாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு பாதிக்கப்படும். கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இடையூறு ஏற்படலாம். ஆனால் செனட் அங்கீகரித்த தற்காலிக நிதி ஒப்பந்தம் DHS-க்கு இரு வாரங்களுக்கு போதுமானது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நிதி ஒதுக்கீடு குறித்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் சில நாட்களுக்குள் நிதி மீண்டும் கிடைக்கும். இதனால் பெரிய இடையூறு ஏற்படாது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2வது ஆட்சியில் நடக்கும் 2வது ஷட்டவுன் இது. முதல் ஷட்டவுன் காலத்தில் அரசு ஊழியர்கள், அரசு பணியில் இருக்கும் ஒப்பந்த ஊழியர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். இதனால் இந்த ஷட்டவுன் அடுத்த வாரமும் நீடித்தால் கட்டாயம் பணிநீக்கம் இருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. அமெரிக்க பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை பதிவான தடுமாற்றத்திற்கு இதுவும் முக்கியமான காரணமாக உள்ளது.
நீண்டகால முடக்கம் ஏற்பட்டால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் ஊதியம் இல்லாமல் வேலை செய்ய வேண்டியிருக்கும் அல்லது சம்பளம் இல்லாத விடுமுறையில் செல்ல வேண்டியிருக்கும்.
இந்த முடக்கம் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் குறுகிய காலமாக இருந்தால் பெரிய பாதிப்பு இருக்காது.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications