அமெரிக்க அரசின் இயக்கத்திற்கு அடிப்படை தேவையான செலவின திட்டங்கள் (Appropriation Bills) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சரியான காலக்கெடுவிற்குள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் வேளையில், பல அமைச்சகங்கள் மற்றும் அரசு சேவைகள் தங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்பட துவங்கியுள்ளது. இதனால் அமெரிக்க அரசு சேவைகள் ஷட்டவுன் ஆகியுள்ளது.
அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், புதன்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், இந்த ஷட்டவுன் அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஒரு நாளுக்கு சுமார் 15 பில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்துவதாக எச்சரித்தார். இந்த இழப்பு, நாட்டின் உற்பத்தி குறைவால் ஏற்படுகிறது, இது பொருளாதாரத்தின் தசையை பாதிக்கத் தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த ஷட்டவுன் தொடர்ந்தால், அமெரிக்காவின் வளர்ச்சி வேகம் குறையும், இது செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய முதலீடுகளை தடைப்படுத்தும் என்று பெசென்ட் எச்சரித்தார். அமெரிக்காவில் தற்போது ஏஐ துறையில் நடைபெறும் முதலீட்டு அலை நிலையாகவும் மற்றும் தொடக்க கட்டத்திலேயே உள்ளது. ஆனால் இந்த ஷட்டவுன் அதற்கு பெரிய தடையாக மாறியுள்ளது என்று அவர் விளக்கினார்.
இந்த ஷட்டவுன் பின்னணியில், அந்நாட்டின் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி உறுப்பினர்களிடையே செலவின திட்டத்தில் இறுதி ஒப்புதல் இல்லாதது முக்கிய காரணம். பெசென்ட், ஜனநாயக கட்சியினரை "நாட்டின் ஹீரோக்களாக" இருந்து குடியரசு கட்சியுடன் இணைந்து இந்த ஷட்டவுன் முடிவுக்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த கருத்து வேறுபாடு, அமெரிக்க அரசின் அடிப்படை இயக்கத்தை பாதிக்கிறது, இது பொருளாதார நிச்சயமின்மையை உருவாக்குகிறது. இந்த நிலைமை, அரசு ஊழியர்களின் சம்பளம் முதல் அரசு சேவைகள் வரை, பாதுகாப்பு துறை முதல் துப்புறவு துறை வரை, அமைச்சர்கள் சம்பளம் முதல் அலுவலக ஊழியர்கள் சம்பளம் வரை அனைத்தையும் பாதிக்கிறது. பெசென்டின் இந்த கோரிக்கை, இரு கட்சிகளும் இணைந்து விரைவில் தீர்வு காணப்படும் என நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

அமெரிக்காவின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் நிலவும் இந்த நிச்சயமின்மை, முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி திருப்புகிறது. குறிப்பாக, தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துக்களில் அவர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்கின்றனர்.
அமெரிக்காவின் நிதியாண்டு செப்டம்பர் 30, 2025 உடன் முடிந்த நிலையில், புதிய நிதியாண்டுக்கான டிரம்ப் அரசு உருவாக்கிய செலவின கொள்கைக்கு செனட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் சுகாதார துறை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, மானியம் ஆகியவற்ரில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், செலவின மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படாமல், அமெரிக்க அரசு ஷட்டவுன்-க்கு தள்ளப்பட்டு உள்ளது. இது இரண்டு வாரங்களாக நீடித்து வருகிறது.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications