ஹெச்1பி ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் திட்டம் ஒத்திவைப்பு.. அமெரிக்க அரசு முடிவு..!

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் பெரும்பாலும் ஹெச்1பி விசா வாயிலாகவே பணியாற்றும் காரணத்தால், பல கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் பணியாற்றும் ஹெச்1பி ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் திட்டம் டிரம்ப் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. தற்போது அமெரிக்க அரசு எடுத்துள்ள புதிய முடிவால் இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

டொனால்டு டிரம்ப் அதிரடி

டொனால்டு டிரம்ப் அதிரடி

டிரம்ப் ஆட்சியில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அமெரிக்காவில் அளிக்கப்படும் வேலைவாய்ப்புகளைக் குறைக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் தற்போது நடைமுறையில் இருக்கும் லாட்டரி முறையை முழுமையாக நீக்கிவிட்டுச் சம்பளம் அடிப்படையிலான விசா முறையைக் கொண்டு வந்தார். இதுமட்டும் அல்லாமல் ஏற்கனவே விசா வாங்கியுள்ளவர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார்.

ஜோ பைடன் சூப்பர்

ஜோ பைடன் சூப்பர்

ஆனால் ஜோ பைடன் ஆட்சியில் இந்தக் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், டிரம்ப் ஆட்சியில் ஹெச்1பி விசா ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் திட்டம் தற்போது மே 12ஆம் தேதி வரையில் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும் இது அடுத்த ஆண்டு நவம்பர் 14 வரையில் ஒத்திவைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடிப்படை சம்பள உயர்வு

அடிப்படை சம்பள உயர்வு

டொனால்டு டிரம்ப் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் சம்பள அளவீடுகளைக் காப்பாற்றும் முடிவில் ஹெச்1பி விசா உரிமையாளர்கள், நிறுவனங்கள் மூலம் கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்துள்ள நபர்களின் அடிப்படை சம்பளத்தை 23 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாக உயர்த்தும் திட்டம் தான் இது.

நாஸ்காம் கருத்து

நாஸ்காம் கருத்து

இந்தத் திட்டம் குறித்து இந்திய ஐடி துறையின் அமைப்பான நாஸ்காம் கூறுகையில், ஹெச்1பி விசா ஊழியர்கள் மக்கும் கிரீன் கார்டு விண்ணப்பம் செய்திருக்கும் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் போதும் அமெரிக்கப் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் அதிகமாகப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

ஹெச்1பி விசா

ஹெச்1பி விசா

இதேவேளையில் பைடன் உத்தரவு மூலம் ஹெச்1பி விசா வழங்குவதில் மீண்டும் லாட்டரி முறை அமலாக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில், 2022ஆம் நிதியாண்டுக்கான ஹெச்1பி விசா-வை பெறுவதற்கு அக்டோபர் 1 முதல் விண்ணப்பம் பெறப்பட்டு வரும் நிலையில், தேர்வு செய்யும் பணிகளை மார்ச் மாதம் இறுதியில் முடிய உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+