வாஷிங்டன்: உலகின் வல்லரசு நாடாக இருந்தாலும்,, மற்ற நாடுகளை விட, கொரோனா வைரஸ் தொற்றால் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருவது அமெரிக்கா தான்.
இதுவரை 1 கோடியே 84 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஒரு புறம் கொரோனா மக்களை பாடாய்படுத்தி வரும் நிலையில், மறுபுறம், பொருளாதாரத்தினையும் வாரி சுருட்டிக் கொண்டு சென்றுவிட்டது.
கொரோனாவால் பாதிப்பு
அதுமட்டும் அல்ல, கொரோனாவால் அமெரிக்காவில் சுமார் 1.20 கோடி பேருக்கு மேல் தங்களது வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர். இதனால், பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் பொருளாதாரம் மோசமான பின்னடைவை சந்தித்து வருகின்றது.
வறுமையின் பிடியில் அமெரிக்க மக்கள்
இதனால் அமெரிக்கா 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வறுமை கண்காணிப்பு தொடங்கியதில் இருந்து, ஒரே ஆண்டில் இவ்வளவு வறுமை அதிகரித்து இருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. கொரோனாவால் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட அமெரிக்கர்கள், தங்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசின் நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
சூமுக நிலையை எட்டியுள்ள பேச்சுவார்த்தை
உண்மையில் அமெரிக்கா தேர்தலுக்கு முன்பிருந்தே இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வந்த நிலையில், தற்போது தான் ஒரு சூமுக நிலையை இரு கட்சியினரும் எட்டியுள்ளனர். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத வகையில், முதல் கட்டமாக 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் கொரோனா நிவாரணமாக ஊக்கத் தொகையாக ஒதுக்கப்பட்டது.
போதுமானதாக இல்லை
எனினும் தற்போது வரை அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடாக இல்லை. இதன் காரணமாக அமெரிக்க பொருளாதாரமும் பின்னோக்கி சென்று கொண்டுள்ளது. இதனால் கொரோனா நிவாரணத்துக்காக அமெரிக்க அரசு ஒதுக்கிய மேற்கண்ட நிதி போதுமானதாக இல்லை. மேலும் இந்த நிதியின் கீழ் கொண்டுவரப்பட்ட கொரோனா நிவாரண திட்டங்கள் பல ஏற்கனவே காலாவதியாகி விட்டன.
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஊக்கத்தொகை
இந்த நிலையில் தான் தற்போது இரண்டாம் கட்டமாக கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.66 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க நாடாளுமன்றமும் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், இந்த நிவாரணத் தொகையில் இருந்து கொரோனாவால் வறுமைக்கோட்டுக்கு தள்ளப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் தலா 600 டாலர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையிழந்தவருக்கு ஊக்கத்தொகை
இதேபோல் வேலை வாய்ப்பை இழந்த அமெரிக்கர்களுக்கு வாரத்துக்கு 300 அமெரிக்க டாலர்கள் நிவாரண தொகையாக அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர கொரோனா தடுப்பூசிகளை வினியோகம் செய்வதற்கான நிதியும் இந்த நிவாரண தொகையிலிருந்து ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விரைவில் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக அனுப்பப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
More From GoodReturns

சாயம் வெளுக்க துவங்கியது.. பணத்தை திரும்ப கொடுக்க முடியாது.. அமெரிக்க முதலீட்டு நிறுவன அறிவிப்பால் ஷாக்..!!

ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல்? பெரும் படைகளை அனுப்ப திட்டம்; 2 இடங்கள் தான் டார்கெட் என தகவல்

அமெரிக்காவில் ஈரானின் Sleeper cell-களா? பாரசீக மொழியில் பறந்த மெசேஜ்.. உளவுத்துறையினர் அதிர்ச்சி..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications