வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் என்ஆர்ஐ இந்தியர்கள் கிராமங்களை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்லும் விதமாக 500 கிராமங்களைத் தத்தெடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கான அறிவிப்பு ஜூலை 1 ம் தேதி சிலிகான் வேலியில் நடைபெற்ற பெட்டர் இந்தியா கான்ஃபரன்ஸின் போது வெளியாகியுள்ளது.
ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
ஓவர்சீஸ் வாலண்டியர் ஃபார் பெட்டர் இந்தியா என்ற அமைப்பு ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் ஆன்மீக குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் 1,000 க்கும் மேற்பட்ட செல்வாக்குள்ள என்ஆர்ஐ தலைவர்கள் முன்னிலையில் இதனை அறிவித்துள்ளார்.
எந்த கிராமங்கள் எல்லாம் தத்தெடுக்கப்படும்
500 கிராமங்களும் அதிகப்படியாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் இடமாகவும், அதிகளவும் வேலைவாய்ப்பு குறைந்துள்ள கிராமங்களாக இருக்கும் என்று ஓவர்சீஸ் வாலண்டியர் ஃபார் பெட்டர் இந்தியா அமைப்பின் தலைவர் சதீஜ் சௌத்ரி தெரிவித்தார்.
வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டம்
2022-ம் ஆண்டிற்குள் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவுவதற்காக, புவியியலாளர்கள், விவசாய வல்லுநர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோரை ஒன்றாக இணைத்து வருகிறோம், "என்று அவர் கூறினார்.
அமைப்பின் என்னம்
இந்தியாவில் விவசாயம், ஆளுமை மற்றும் மனிதர்களுக்கு உள்ள பிரச்சனைகள் ஆகியவற்றில் எதிர்கொள்ளும் சவால்கள் போன்றவற்றில் இந்த அமைப்புக் கவனம் செலுத்த உள்ளது.