வாஷிங்டன்: அமெரிக்கா உள்ளிட்ட ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளும் இணைந்து, ரஷ்யாவின் மீது புதியதாக மற்றொரு தடையை விதிக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகின்றது.
தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனையானது, இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் நிலையில், ரஷ்யா மிக மோசமான தாக்குதலை நடத்தி வருகிறது.
இதற்கிடையில் பல லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அங்கு பல ஆயிரம் பேர் போரினால் இறந்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் புதிய ஆலோசனை?
இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சு வார்த்தைக்கு மத்தியில் ரஷ்ய படைகள் தலை நகர் கீவ்வில் இருந்து வெளியேறிய நிலையில், கீவ்வில் உள்ள இர்பின், புச்சா நகரங்களில் மக்கள் பலரும் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பலரும் கை கால்கள் கட்டபட்ட நிலையில் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து புச்சா நகரத்து மேயர் புச்சா நகரில் உள்ள ஒரு தெருவில் 20 பேர் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தாகவும் கூறியுள்ளார். மேலும் 300 உடல்களை ஒரே இடத்தில் புதைத்துள்ளதாகவும் கூறியிருந்தார். இது பார்ப்போரின் மனதினை கலங்க வைக்கும் நிலையில் தான், பல நாடுகளும் மீண்டும் ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்க தொடங்கியுள்ளன.
முதலீடுகளுக்கு தடையா?
ரஷ்யாவில் அனைத்து புதிய முதலீடுகளுக்கும் தடை, ரஷ்யாவில் நிதி நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மீதான தடை, ரஷ்ய அரசு அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் என பலரின் மீதும் பொருளாதார தடையை விதிக்க திட்டமிட்டுள்ளதாக இதனையறிந்த ஆதாரங்கள் AFP-யிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவில் தாக்கம் இருக்கலாம்
ஏற்கனவே ரஷ்யா போர் குற்றங்களை செய்து வருகின்றது. இதற்கிடையில் தற்போது புச்சாவில் நடந்த நிகழ்வுகள் இதனை சுட்டிக் காட்டும் விதமாகவே காணப்படுகின்றது.
இவ்வாறு விதிக்கப்படும் புதிய தடைகள் ரஷ்யா மீது சற்று தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தல், தொழில்நுட்ப ரீதியாக தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
15 ஆண்டுகால வளர்ச்சியினை பாதிக்கலாம்
மொத்தத்தில் இது ரஷ்யாவின் செயல்பாடுகளை குறைக்கலாம். இது பொருளாதார ரீதியாகவும் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தலாம். இதற்கிடையில் ரஷ்யாவின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 15% வரை சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 15 ஆண்டுகால பொருளாதார ஆதாயங்களை அழித்துவிடும் என்றும் கூறப்படுகின்றது. மொத்தத்தில் ரஷ்யாவுக்கு அடுத்த செக்கினை வைக்க அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தயாராகி வருகின்றன.
More From GoodReturns

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications