அமெரிக்க சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் டெக்னாலஜிஸ் லிமிடெட் மற்றும் சீனா 5ஜி சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மசோதா மூலம் SDN பட்டியலில் இந்த நிறுவனங்கள் சேர்க்கப்படலாம். இதன் மூலம் இந்த நிறுவனங்கள் அமெரிக்க நிதித் துறையை அணுகுவதை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
5ஜில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா, அமெரிக்கர்களின் தரவுகளை திருடுவதற்கும், ஹூவாயின் மோசமான முயற்சிகளை எதிர்த்தும் சமீபத்திய ஆண்டுகளில் நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம்.
சீன உளவுத்துறையின் ஒரு அங்கம்
ஹூவாய் சீன உளவுத்துறையின் ஒரு அங்கம் என கூறும் அமெரிக்கா, அமெரிக்கர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு அமைப்புகளின் தரவுகளையும் அணுக அனுமதிக்கிறது.
சீன நிறுவனங்கள் நமது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயகரமானவையாகும்.
அமெரிக்கர்கள் எச்சரிக்கை
இவ்வாறு அமெரிக்காவை உளவு பார்க்கும் நிறுவனங்களும், அமெரிக்கர்களின் சட்டங்களை மீறுபவர்களுக்கும், கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பினை வலுப்படுத்த முடியும் என அமெரிக்க தரப்பு எதிர்பார்க்கிறது.
ட்ரம்ப் காலத்திலேயே தடை
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியில் இருந்தபோதே இந்த பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்தது. அமெரிக்காவினை தொடர்ந்து இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் தடை விதித்தன. உலகின் டெக் ஜாம்பவானாக இருந்தாலும், சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டன.
அமெரிக்காவின் குற்றச்சாட்டு
கொரோனா காலத்திலேயே இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பனிப்போர் என்பது அதிகரித்தது. ட்ரம்ப் கொரோனாவையே சீனா தான் உருவாக்கியது. இது சீன ஆய்வகத்தில் தான் உருவானது என குற்றம் சாட்டினார்.
மேலும் நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் கைப்பேசி தொலைக்காட்சி மற்றும் மடிக்கணினியில் பயன்படுத்தப்படும் சிப்புகளை பயன்படுத்தி, சீனா அமெரிக்காவின் தொழில் நுட்பங்களை களவாடுவதாகவும், அமெரிக்காவினை உளவு பார்ப்பதாகவும் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டினார்.
மீண்டும் அதிகரிக்கும் தடை
இப்படி தொடர்ந்து அடுக்கடுக்காக அடுத்தடுத்த பிரச்சனைகள் இருந்து வந்தது. இது ஜோ பைடன் பதவிக்கு வந்தால் சரியாகும் என்று பெரிதும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் இந்த பிரச்சனையானது தலை தூக்க தொடங்கியுள்ளது. மீண்டும் சீனாவின் மீதான தடைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
More From GoodReturns

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications