உலகிலேயே மோசமான பொருளாதாரத்தைக் கொண்டு இருக்கும் நாடுகளில் முக்கியமானதாக மாறி வரும் பாகிஸ்தான் எப்படியாவது திவால் ஆகாமல் தப்பிக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக உள்ளது. மேலும் தனது வர்த்தகத்தை இந்தியாவுடன் மேம்படுத்தவும், பேச்சுவார்த்தை நடத்தவும் ஆர்வம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் பலத்தையும் அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் ஏவுகணைத் திட்டத்திற்கும், நீண்ட தூரம் பயணித்துத் தாக்கும் ஏவுகணைத் திட்டத்திற்கும் 2 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் உதவியுள்ளதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் ஏவுகணைத் திட்டத்திற்கு (ballistic missile programme) உதவி செய்து வந்த சீனா மற்றும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது என அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் ஏவுகணைத் திட்டத்திற்கு, குறிப்பாக நீண்ட தூர ஏவுகணை திட்டத்திற்கு (long-range missile programme) உதவி செய்து வந்த சீனாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் மற்றும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதில் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களில் Xi'an Longde Technology Development, Tianjin Creative Source International Trade, Granpect Co. Ltd ஆகியவையும், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த Minsk Wheel Tractor Plant நிறுவனமும் அடக்கம்.

இந்த நிறுவனங்கள் பாகிஸ்தானின் அணு ஆயுத பரவல் திட்டத்திற்கு உதவி புரிவதன் மூலம், சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் பாகிஸ்தான் தயாரிக்கவும், தடை செய்யப்பட்ட பொருட்களைப் பாகிஸ்தான் தயாரித்தல், கையகப்படுத்துதல், வைத்திருத்தல், உருவாக்குதல், பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கும் அபாயம் உள்ளது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அணு ஆயுத பரவலைத் தடுப்பதற்கான உலகளாவிய ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாகவே, முறையற்ற ஆயுத திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் கொள்முதல் நெட்வொர்க்குகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது.
பாகிஸ்தானின் நட்பு நாடாக அனைத்து காலங்களிலும் உதவி புரிந்து வரும் சீனா, இஸ்லாமாபாத்தின் ராணுவ நவீனமயமாக்கல் திட்டத்திற்கு (military modernisation programme) முக்கிய ஆயுத மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் வழங்குபவராக இருந்து வருகிறது. இந்த தடை நடவடிக்கை குறித்து சீனா இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!



Click it and Unblock the Notifications