கூகுள், அமேசான், மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்துமே தங்களுடைய அன்றாட வேலைகளில் ஏஐ கருவிகளை அதிகளவில் பயன்படுத்த தொடங்கி விட்டன. இது நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் உற்பத்தி திறனை ஊக்குவிப்பதாக இந்த நிறுவனங்கள் கூறுகின்றன .
கூகுளை பொறுத்தவரை பெரும்பாலான கோடிங் வேலைகளை ஏஐ கருவிகள் வசம் ஒப்படைத்து விட்டதாக சுந்தர் பிச்சையே ஒரு முறை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். இந்த சூழலில் கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இதன்படி கூகுளில் சாஃப்ட்வேர் இன்ஜினியர்களாக வேலை செய்யக்கூடிய நபர்கள் தினமும் கட்டாயம் ஏஐ கருவிகளை பயன்படுத்த வேண்டும், குறிப்பாக கோடிங் எழுதுவதற்கு ஏஐ கருவிகளை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளாராம்.

கூகுள் நிறுவனம் உருவாக்கிய ஏஐ கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஆர்டர் போட்டு இருக்கிறார் . கூகுள் ஊழியர்கள் வேலையில் ஏஐ பயன்பாட்டினை அதிகரிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன . எந்த ஒரு சந்தேகம் இருந்தாலும் உடனடியாக சக ஊழியரை கேட்காமல் ஏஐ கருவிகளை பயன்படுத்த தொடங்குங்கள் என தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறதாம்.
கூடிய விரைவில் ஊழியர்களுக்கான பெர்ஃபாமன்ஸ் ரிவியூ என்பது அவர்கள் வேலையில் எப்படி திறமையாக செயல்படுகிறார்கள் என்பதை தாண்டி ஏஐ கருவிகளை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் முடிவு செய்யப்படுமாம். பிசினஸ் இன்சைடர் வெளியிட்டுள்ள தகவலின் படி கூகுள் நிறுவனத்தின் இன்ஜினியரிங் பிரிவுக்கான துணைத் தலைவர் கச்சோலியா அனைத்து பொறியாளர்களுக்கும் ஒரு மின்னஞ்சலை அனுப்பி இருக்கிறார். அதில் அனைத்து இன்ஜினியர்களும் கண்டிப்பாக கோடிங் பணிகளுக்கு கூகுள் நிறுவனம் உருவாக்கிய ஏஐ கருவிகளை அன்றாடம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என கூறி இருக்கிறாராம் .
ஒருவேளை கோடிங் அல்லாத பிற வேலைகளுக்கு கூகுள் நிறுவனம் அல்லாத மற்ற நிறுவனங்களின் ஏஐ கருவிகளை பயன்படுத்த போகிறீர்கள் என்றால் அதற்கு முன்னதாக தலைமை அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும் என அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருக்கிறதாம் . தற்போது அனைத்து மேலாளர்களும் தங்களின் கீழ் பணி புரியக்கூடிய ஊழியர்களிடம் தினமும் அவர்களுடைய வேலையில் எத்தனை சதவீதம் ஏஐ கருவிகளை பயன்படுத்துகிறீர்கள் என்பதை ரிப்போர்ட்டாக வழங்க அறிவுறுத்தி இருக்கிறார்களாம்.
இனி வரும் நாட்களில் கூகுள் ஊழியர்களின் சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவை எல்லாம் அவர்களின் வேலை திறனை மட்டுமே அடிப்படையாக கொள்ளாமல் அவர்கள் ஏஐ கருவிகளை எப்படி பயன்படுத்து கொள்கிறார்கள் என்பதையும் அடிப்படையாக கொண்டு தான் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அதிக அளவில் ஏஐ பயன்படுத்தும் ஊழியர்களுக்கு பல்வேறு அங்கீகாரமும் பரிசுகளும் வழங்கப்படுகிறதாம்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications