பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கட்சி உத்தரபிரதேசத்தில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை அடைந்துள்ளது சீனாவை பயமுறுத்தியுள்ளது.
இனி நரேந்திர மோடியை எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒன்று எனச் சீன அரசு பத்திரிக்கை செய்தி வெயிட்டுள்ளது.
குளோபல் டைம்ஸ்
சீன கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வரும் பத்திரிக்கை நிறுவனமான குளோபல் டைம்ஸ், சமீபத்தில் இந்தியாவில் நடந்த 5 மாநில தேர்தலில் மோடியின் வெற்றி இந்தியாவிற்கும், இந்திய சந்தைக்கும் சாதகமான ஒன்றாக இருந்தாலும், பிற நாடுகளுக்கு அவரைச் சமாளிப்பதும் எதிர்கொள்வதும் மிகவும் கடினமாக இருக்கும் என்று இப்பத்திரிக்கையில் செய்தியை வெளியிடப்பட்டுள்ளது.
2019 பொதுத் தேர்தல்
மேலும் இந்தப் பத்திரிக்கையில் மோடியின் இந்த வெற்றி 2019ஆம் ஆண்டு நடக்க இருக்கும் பொதுத் தேர்தல் மோடியின் வெற்றியும், அந்தக் கட்சியின் வெற்றியும் மிகத் தெளிவாகத் தெரிகிறது.
இதன் மூலம் மோடி தனது இரண்டாவது கால ஆட்சியை அமைப்பார் எனத் தெரிகிறது என்று இந்தச் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா
மோடியின் தலைமையில் இந்தியாவின் மனநிலையும் சரி, உறுதியும் சரி சர்வதேச சந்தையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்த உறுதியான நிலை அடுத்தச் சில வருடங்களுக்கும் தொடரும் என்பதால் இந்தியாவில் உடன் போட்டிபோடும் அனைத்து நாடுகளுக்கும் இது மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.
பாதுகாப்புத் துறை
மேலும் மோடி தலைமையிலான ஆட்சி இந்திய பாதுகாப்பு துறையை மிகப்பெரிய அளவில் வலிமையாக்கியுள்ளது. இதன் மூலம் எல்லையோர நாடுகளுக்கு மோடியின் வெற்றி தற்போது தலைவலியாகவே மாறியுள்ளது என்றே கூறலாம்
சர்ஜிக்கல் அட்டடாக்
இதில் மோடி உத்தரவின் படி பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்கல் இதில் மிக முக்கியப் பங்கை வகுக்கிறது. உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என்றே சொல்லவேண்டும்.
அட நீங்க இத பாருங்க...
பாகிஸ்தான் தீவிரவாதிக..." data-gal-src="http:///img/600x100/2014/10/01-1-usmilitaryarmy.jpg">