சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்கா: அமெரிக்காவை சேர்ந்த பெரிய பெரிய டெக் நிறுவனங்களில் எல்லாம் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களும், இந்திய அமெரிக்கர்களும் தான் தலைமை வகிக்கின்றனர். அந்த வகையில் கூகுள் நிறுவனத்தில் இந்திய அமெரிக்கரான நீல்மோகன் முக்கிய பதவி வகித்தவர் .குறிப்பாக கூகுளின் விளம்பரம் மற்றும் யூடியூப் பிரிவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்.
நீல் மோகன் ஸெரோதா துணை நிறுவனர் நிகில் காமத்துடன் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அப்போது கூகுள் நிறுவனம் தன்னை போன்ற தகவல் தொழில்நுட்ப உலகில் சிறந்த விளங்கக்கூடிய ஊழியர்களை தக்க வைப்பதற்காக என்னவெல்லாம் செய்தது என்பது குறித்து விரிவாக தெரிவித்து இருக்கிறார்.

இந்த கலந்துரையாடலின் போது நிகில் காமத்" 2011 ஆம் ஆண்டு எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, கூகுள் நிறுவனம் நீங்கள் கூகுளை விட்டு டிவிட்டரி நிறுவனத்துக்கு செல்லக்கூடாது என்பதற்காக 100 மில்லியன் டாலர்கள் வழங்குவதற்கு தயாராக இருந்ததாமே. 15 ஆண்டுகளுக்கு முன்னர் 100 மில்லியன் டாலர் என்பது மிகப்பெரிய தொகை அல்லவா ?" என கேள்வி எழுப்பினார் . அதற்கு ஆம் நீல் மோகன் பதிலளித்திருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் யூடியூப் பிரிவில் நீல்மோகன் பணியாற்றி வந்திருந்தார். அப்போது டிவிட்டர் நிறுவனம் அவரை தங்களுடைய நிறுவனத்தின் சிறப்பு தலைமை அதிகாரியாக நியமனம் செய்வதற்கு முயற்சி செய்தது. இதனை அறிந்த கூகுள் நிறுவனம் நீல்மோகனை கைவிட்டு விடக்கூடாது என்பதற்காக அவர் தொடர்ந்து நிறுவனத்தில் நீடிக்க வேண்டும் என்பதற்காக 100 மில்லியன் டாலர்களை வழங்கியது.
இந்த 100 மில்லியன் டாலர்கள் என்பது நிறுவன பங்குகளில் கணிசமான பங்கினை நீல் மோகனுக்கு வழங்குவதாக கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. நீல்மோகனை பொருத்தவரை அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பொறியியல் படிப்பை முடித்திருக்கிறார். பின்னர் அசெஞ்சர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
அதனை தொடர்ந்து நெட் கிராவிட்டி நிறுவனத்தில் பணியாற்றிய அவர் அந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக உயர்ந்தார். 2007 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அவர் கூகுள் நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் வீடியோ சம்பந்தப்பட்ட பிரிவுகள் வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் .2011 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக இவர் உருவெடுத்தார் .
அந்த சமயத்தில் இவரை கைவிட்டு விடக்கூடாது என்பதற்காக கூகுள் நிறுவனம் இவருக்கு 100 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை வழங்கி இருக்கிறது. நீல்மோகன் மட்டுமல்ல அதே காலகட்டத்தில் சுந்தர் பிச்சையையும் தங்கள் நிறுவனத்தில் வேலை அமர்த்துவதற்கு முயற்சி செய்து இருக்கிறது டிவிட்டர். அந்த சமயத்தில் சுந்தர் பிச்சை கூகுளின் குரோம் செயலிக்கு தலைமை வகித்து வந்தார். அப்போது 50 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை வழங்கி கூகுள் நிறுவனம் சுந்தர் பிச்சையை தக்கவைத்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பிறகு கூகுள் நிறுவனத்தில் நீல் மோகன் மற்றும் சுந்தர் பிச்சை ஆகிய இருவருமே அடுத்தடுத்த பதவிகளுக்கு உயர்ந்தனர். 2023 ஆம் ஆண்டில் யூடியூபின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பு நீல் மோகனுக்கு வழங்கப்பட்டது, சுந்தர் பிச்சை தற்போது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு வகித்து வருகிறார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications