உலகம் முழுவதுமே ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்தே பேசி வருகிறது. ஐடி நிறுவனங்கள் தொடங்கி பல துறைகளிலும் மனிதர்கள் செய்து வந்த வேலைகளை எல்லாம் இப்போது ஏஐ தொழில்நுட்பம் செய்ய தொடங்கிவிட்டது. இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை பெரும்பாலும் எந்த வகை வேலைகளை அதிகம் பாதிக்கும் என்பது பற்றி பிரபல ஜெஃப்ரீஸ் (Jefferies) நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரும்பாலும் நுழைவு நிலை வேலைகளையே பாதிக்கும் என ஜெஃப்ரீஸ் அறிக்கை எச்சரிக்கிறது. அதாவது வைட் காலர் வேலைகளில் நுழைவு நிலை வேலைகளை எல்லாம் இனி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமே பார்த்து கொள்ளும் என தெரிவித்துள்ளது. எனவே வைட் காலர் பணிகளில் நுழைவு நிலை வேலைகள் இனி மனிதர்களுக்கு கிடைப்பது கடினம் என கூறியுள்ளது.

அமெரிக்காவில் அண்மையில் பட்டப்படிப்பை முடித்து வேலைவாய்ப்பு கிடைக்காதவர்களின் விகிதம் 5.8 சதவீதமாக இருக்கிறது என குறிப்பிட்டிருக்கும் ஜெஃப்ரீஸ் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதின் வருகை இதற்கு முக்கிய காரணம் என குறிப்பிட்டுள்ளது.
நிறுவனங்கள் நுழைவு நிலையில் இருக்கும் வேலைகளை ஏஐ தொழில்நுட்பத்திடம் ஒப்படைத்துவிட்டன. எனவே அண்மையில் படிப்பை முடித்த பட்டடாரிகள் வேலைவாய்ப்பு கிடைக்காமல் தவிக்காமல் என கூறுகிறது. வேலைவாய்ப்பு பெறுவது என்பது இவர்களுக்கெல்லாம் மிக கடினமானதாக மாறிவிட்டது என தெரிவிததுள்ளது.
அடுத்த 1 முதல் 5 ஆண்டுகளில் 50 சதவீத நுழைவு நிலை வைட் காலர் வேலைகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வசம் சென்று விடும் என Anthropic நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியன டாரியோ அமோடெய் கூறியுள்ளார். இந்த போக்கு இப்படியே நீடித்தால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் வேகமாக உயரும் என்றும் 10 முதல் 20 சதவீதமாக உயரும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகை விற்பனை, வாடிக்கையாளர் சேவை, மென்பொருள் மேம்பாடு, மார்க்கெட்டிங் துறைகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ள ஜெஃப்ரீஸ் அறிக்கை இங்கெல்லாம் தான் ஜூனியர் நிலை பணியாளர்கள் அதிகம் இருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளது.
தொழில்நுட்ப பட்டப்படிப்புகளை முடித்தவர்களும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தவர்களில் 7.5 சதவீதம் பேரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிடததவர்களில் 6.1 சதவீதம் பேரும் வேலை கிடைக்காமல் இருக்கின்றனர் என அநந் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அண்மையில் தான் ஐபிஎம் நிறுவனம் ஹெச்ஆர் வேலைகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஒப்படைத்ததாக அறிவித்தது. அதாவது அந்த வேலையில் இருண்ந மனிதர்கள் நீக்கப்பட்டு வேறு பிரிவுகளில்ஊழியர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டதாம்.இப்படி பல நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ள ஜெஃப்ரீஸ் ஏஐ தொழில்நுட்பம் நிறுவனங்களுக்கு வணிகத்தை பெருக்கி கொள்ள வாய்ப்பு தருகிறது, அதே வேலையில் இளம் ஊழியர்களின் வேலைவாய்ப்பையும் பறிக்கிறது என கூறியுள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications