மலிவான சம்பளத்தில்,தேவையான அளவு தொழிலாளர்கள் கிடைத்தாலும் இனிமேலும் ஆட்டோமேஷனை தவிர்க்கமுடியாது. அதுவும், உலகின் மிகப்பெரிய தொழிலாளர் வளத்தைக் கொண்டுள்ள சீனா இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் மிக அதிகமான முதலீடுகளைச் செய்துவருகிறது.
இந்தியா ஏன் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும் என இங்கே பார்க்கலாம்.
உற்பத்தித் திறன் சார்ந்தது
கடந்த சில ஆண்டுகளாகவே சீனா ஒரு தொழிலாளிக்கான உற்பத்தி விகிதத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று வருகிறது. முழுமையான முதலீடும், உலகளவில் சிறந்த வழிமுறைகளும் இந்த வளர்ச்சி காலகட்டத்தில் உதவின.
தோய்விற்கான காரணிகள்
ஆனால், 2010 ல் 10% ஆக இருந்த தொழிலாளர் உற்பத்தித்திறன் வளர்ச்சி இந்த வருடம் 7% ஆகக் குறைந்துள்ளது. இந்த விகிதம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர்களுக்காகச் செலவிடும் தொகை, சீனாவின் மலிவான உற்பத்தியை உயர்த்துவதால் திறன் குறைந்த பணியாளர்கள் குறைந்துள்ளனர். மக்களும் வயதானவர்களாக மாறிவருகிறார்கள். மக்கள்தொகை பங்கீடும் குறைந்து வருகிறது.
உற்பத்தித்திறனை அதிகரிக்கும் புதிய தொழில்நுட்பங்கள்
ஆட்டோமேஷன் என்பது தொழிலாளர்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுவதாலும், புதுமையான படைப்புகளாலும் உற்பத்தித்திறன் பெரிய அளவில் அதிகரிக்கும். 2015 வுடன் ஒப்பிடும் போது, 2030ல் புதிய தொழில்நுட்பங்களால் உற்பத்தித்திறன் சராசரியாக 30% அதிகரிக்கும்.
உற்பத்தி செலவை குறைத்தல்
திறமையான ரோபோட்டின் உற்பத்தி செலவுகளைக் குறைத்தால் ஆட்டோமேஷன் துறையில் அடுத்தகட்டத்தை நோக்கி நகரலாம்.
வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும்
இந்தியாவில் 77% வேலைவாய்ப்புகள், ஆட்டோமேஷனால் பாதிக்கப்படக்கூடும் என உலகவங்கி கணித்துள்ளது. அது சீனாவில் 69% ஆக இருக்கும். ஆனால், ஆட்டோமேஷன் மூலம் தொழில்துறையில் உற்பத்தி அதிகரித்து , அதனால் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகலாம் எனவும் கூறுகின்றனர்.
ஊதியத்தை உயர்த்துவதன் மூலம் ஆட்டோமேஷன் முதலீட்டை ஊக்கப்படுத்தும் சீனா
2010 ல், முதலீட்டை திருப்ப எடுக்கும் காலமும், தொழிலாளர்களுக்குப் பதில் ஆட்டோமேஷனை பயன்படுத்தும் காலமும் சீனாவில் 5.3 ஆண்டுகளாக இருந்தது.
2016 ல், ரோபோட்டின் குறைந்த விலை மற்றும் உயர்ந்ந தொழிலாளர்களுக்கான செலவுகளால், முதலீட்டை திரும்ப எடுக்கும் காலம் 1.5 ஆண்டாகக் குறைந்தது. இன்னும் பத்தாண்டுகளில், 1 ஆண்டாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.