இங்கிலாந்து : இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய, 42 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க டாய்லெட் திருடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் திருடப்பட்ட அந்த தங்க டாய்லெட்டினை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
லண்டன் வுட்ஸ்டாக் பகுதியில் உள்ள பெலன்கிம் அரண்மனை தான், வின்ஸ்டன் சர்ச்சில் குடும்பம் வாழ்ந்த அரண்மனையாகும், இந்த அரண்மனையில் வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய தங்கத்தினால் செய்யப்பட்ட இந்த தங்க டாய்லெட், அந்த நாட்டில் கண்காட்சி பொருளாக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்த தங்க டாய்லெட்டை கடந்த சனிக்கிழமையன்று திருடர்கள் திருடியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த டாய்லெட்டின் இன்றைய இந்திய மதிப்பு 42.5 கோடி ரூபாய் என்று ( பவுண்டில் 4.8 மில்லியன் பவுண்டு) கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த நாட்டு காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அருங்காட்சியகத்தில் டாய்லெட் வைக்கப்பட்டிருந்த இடத்தில் சேதம் ஏற்பட்டதுடன் தண்ணீரும் கசிந்து வெளியே வந்து கொண்டிருந்தது. இதையடுத்தே தங்க டாய்லெட் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த அரண்மனையில் பணியாற்றிய 66 வயதுடைய ஒரு நபர் மாயமாகியுள்ளாதாகவும், அவர் இதை எடுத்துச் சென்றிருக்கலாம் என்றும், அவருக்கும் இந்த திருட்டு சம்பவத்திற்கும் இடையே தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாகவும், தற்போது அவரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் தற்போது அந்த தங்க டாய்லெட் திருட்டு போனதால் அரண்மனையை தற்போதைக்கு அடைக்க உத்தரவிட்டுள்ளாதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
தான் பிறந்ததிலிருந்தே அரச குடும்பத்தைச் சார்ந்த விஸ்ன்ஸ்டன், ஆரம்பத்திலிருந்தே மிக செல்வாக்காக வாழ்ந்தவர் என்றும், ஒரு புறம் மிக மதிப்பும் மரியாதையும் கொண்ட பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த அப்பா, மிகப்பெரிய அமெரிக்கா செல்வந்தரின் மகள் தான் வின்ஸ்டனின் தாய், இப்படி ஆரம்ப காலத்திலேயே செல்வ செல்வாக்குடன் வளர்ந்த விஸ்டனுக்கு இந்த தங்க டாய்லெட் என்ன பெரிய விஷயமா?
வின்ஸ்டன் மிகச் சிறந்த பேச்சாளர் என்பதோடு, திறமையான இராணுவ அதிகாரியுமாக இருந்தவர். பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமரும் ஆனவர்.
எது எப்படி இருந்த என்னங்க.. இன்றைக்கு விக்கிற விளைவாசிலா டாய்லெட்டா இருந்தா என்ன? அதுவும் தங்கம் தானே, அதுவும் 42 கோடி ரூபாய் மதிப்பு விட முடியுமா? இது தான் ரொம்ப காஸ்டிலியானா தங்க திருட்டு.


Click it and Unblock the Notifications