உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய யாஹூ பல்வேறு காரணங்களால் நிலைகுலைந்து போனது. இந்நிலையில் தனது நஷ்ட அளவீடுகளைக் குறைக்கும் பொருட்டாக யாஹூ நிறுவனம் தனது இண்டர்நெட் வர்த்தகத்தை வெரிசோன் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யதுத.
இந்நிலையில் 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் யாஹூ நிறுவனம் வருவாயில் 22.1 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
மேவென்ஸ்
முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட யாஹூ தனது மேவென்ஸ் பிரிவின் வருவாய், அதாவது மொபைல், வீடியோ, நேடீவ் மற்றும் சோஷியல் விளம்பர பிரிவுகளின் வருவாய் அளவு மட்டும் மார்ச் 31ஆம் தேதி முடிவில் 35.6 சதவீதம் வரை உயர்ந்து 529 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
மொத்த வருவாய்
அதேபோல் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு கடந்த வருடம் 1.09 பில்லியன் டாலராக இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டின் 1.33 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
வெரிசோன்
2017ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் யாஹூ நிறுவனத்தின் கோர் வர்த்தகத்தை 4.48 பில்லியன் டாலருக்கு வெரிசோன் வாங்க ஒப்புக்கொண்டது. இதில் யாஹூ நிறுவனத்தின் இண்டர்நெட் தேடல் மற்றும் ஈமெயில் சொத்துக்களும் அடக்கம்.
சைபர் அட்டாக்
யாஹூ நிறுவனத்தின் மீது நடந்த இரண்டு சைபர் அட்டாக் மூலம் இந்நிறுவனத்தின் வர்த்தகம், சந்தையில் இந்நிறுவனத்தின் மதிப்பும் மிகப்பெரிய அளவில் சரிந்தது. இதன் காரணமாக யாஹூ நிறுவனம் தொடர் வருவாய் இழப்பைச் சந்தித்து வந்த நிலையில் தனது வர்த்தகப் பிரிவுகளை விற்பனை செய்ய ஒப்புக்கொண்டது.
'அடேங்கப்பா' டீல்
ஒரு பெரிய நிறுவனம் சிறிய நிறுவனத்தை வாங்குவது இயல்பு, ஆனால் ஒரு பெரிய நிறுவனம் இன்னொரு பெரிய நிறுவனத்தை வாங்குவது சந்தையைப் புரட்டிப்போட கூடிய ஒன்று.