மீண்டும் தங்கத்தின் விலை உயர காரணம் யார் தெரியுமா?

சென்னை: உலக அளவில் 2011ம் அக்டோபருக்குப் பின்பு இந்த வாரம் தங்கத்தின் விலை கணிசமான அளவிற்கு உயர்ந்திருக்கிறது.

உலக அளவில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுவதைப் பொறுத்தே இந்தியாவிலும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் உலக அளவில் கடந்த 16ல் ஒரு அவுன்ஸ் 1320 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இந்த வார முடிவில் 150 அமெரிக்க டாலர்கள் உயர்ந்து இந்த வார இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1470 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை படிப்படியாக உயர ஆரம்பித்திருக்கிறது. தங்கத்தில் விலை உயர்வதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

மீண்டும் ஏறுமுகம் ஏன்?

மீண்டும் ஏறுமுகம் ஏன்?

தங்கத்தின் விலை இந்த வாரம் மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் விலை குறைந்தவுடன் உலக அளவில் ஏராளமான மக்கள் தங்க நகைகள் வாங்கத் தொடங்கினர். மேலும் முதலீட்டாளர்கள் ஈடிஎஃப்பை மறந்துவிட்டு மீண்டும் தங்கத்தின் மீது முதலீடு செய்யத் தொடங்கிவிட்டனர்.

கூடுதல் தங்கம் வாங்கும் துருக்கி

கூடுதல் தங்கம் வாங்கும் துருக்கி

உலகிலேயே துருக்கி தான் அதிக அளவில் தங்கத்தை வாங்கும் நாடாக உள்ளது. இந்நிலையில் துருக்கியில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதையடுத்து அது இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் மிக அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதுபோல் ரஷ்யாவும் தங்க கையிருப்பை அதிகரித்துள்ளது என்று ஐஎம்எப் தெரிவித்திருக்கிறது.

இரண்டாவது இன்னிங்ஸ்

இரண்டாவது இன்னிங்ஸ்

தங்கம் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கி இருக்கிறது என்று சொல்லலாம். தங்கத்தின் விலை இனி கூடுமா அல்லது குறைமா என்று தீர்மானித்து சொல்ல முடியாது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+